ஹோட்டலை நல்லபடியாக நடத்தும் பெண்கள்.. ஜீவாவிடம் புகார் தெரிவிக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம், ஐஸ்வர்யா, முல்லை என அனைவரும் சேர்ந்து சந்தோசமாக ஹோட்டலை நடத்துகின்றனர். பின் மீனா குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை எனவும், வீடு வசதியாக இல்லை எனவும் ஜீவாவிடம் குறை சொல்கிறார். அதன் பின் குடித்துவிட்டு ஒருவர் ஹோட்டலில் வந்து தகராறு செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிர் பேசிக் கொண்டிருக்க, கதிர் உன் உடம்பை வருத்தி நமக்கு குழந்தை வேண்டாம் என சொல்கிறார். உனக்கு குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் என எனக்கு தெரியும். ஆனால் நான் சொல்வதை கேட்டு நீ வருத்தப்படாதே என சொல்ல, முல்லை எனக்கும் குழந்தை பற்றிய ஆசை இல்லை காலம் முழுவதும் நாம இப்படியே இருக்கலாம் என சொல்கிறார்.மறுநாள் பெண்கள் மூவரும் சேர்ந்து ஹோட்டல் வேலையை கவனிக்கின்றனர். அவர்களுக்கு துணையாக முருகன் இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
தனம், ஐஸ்வர்யா, முல்லை என அனைவரும் சேர்ந்து ஹோட்டலிற்கு வருபவர்களைநன்றாக கவனித்து அனுப்புகின்றனர். பின் ஐஸ்வர்யா ஹோட்டல் வேலை ஒன்றும் கஷ்டம் இல்லை என சொல்ல, முருகன் நீங்க மூன்று பேரும் சேர்ந்து சந்தோசமாக வேலை பார்ப்பதால் கஷ்டம் இல்லாமல் இருப்பதாக சொல்கிறார். பின் சாப்பிட வந்தவர் முல்லையிடம் சாப்பாடு நன்றாக இருக்கிறது. நீங்க எந்த ஊர் என கேட்கிறார். நாங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தான் என முல்லை சொல்கிறார். பின் முல்லை அக்கா இத்தனை மாசம் நாங்க ஹோட்டல் நடத்துகிறோம் ஆனால் கடை பற்றி யாரும் கேட்டதில்லை ஆனால் இந்த முறை பெண்களாக சேர்ந்து நடத்துவதால் தான் கேக்கிறார் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
பின் மீனா குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார். அப்போது ஜீவா வீட்டிற்கு வர, மீனா ஜீவாவிடம் நான் தனியாக குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதாக சொல்கிறார். அப்போது ஜீவா குழந்தைகளை பார்த்துக் கொள்ள என்ன கஷ்டம் என கேட்க, இந்த வீட்டில் தண்ணீர் இல்லை, அதனால் குழந்தைகளை வைத்துக் கொண்டு தண்ணீர் எடுக்க போவது ரொம்ப கஷ்டம் என சொல்கிறார். அந்த வீட்டில் தான் வசதி இல்லை என நினைத்தேன் ஆனால் இந்த வீட்டில் சுத்தமாக வசதி இல்லை என சொல்கிறார். ஆனால் மீனா புலம்புவதை கேட்காமல் ஜீவா கடைக்கு கிளம்பி செல்கிறார்.
மறுபக்கம் ஹோட்டல் வேலைகள் முடிந்துவிட முல்லையிடம் தனம் வியாபாரம் பற்றி கேட்கிறார். முல்லை வியாபாரம் சரியாக இருப்பதாக சொல்கிறார். பின் ஒருவர் குடித்துவிட்டு ஹோட்டலிற்கு வருகிறார். அப்போது அவர் சாப்பாடு கேட்க சாப்பாடு இல்லை என சொல்கின்றனர். பின் அந்த ஆள் சிக்கன் கேட்க ஐஸ்வர்யா திமிராக பேசுகிறார். அப்போது அந்த ஆள் இப்பவே எனக்கு சிக்கன் வேண்டும் என சொல்கிறார். அவர் வேண்டும் என்றே வம்பு இழுப்பதால் ஐஸ்வர்யா கோபப்படுகிறார். ஆனால் அவர் நான் போக மாட்டேன் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.