கதிரை வீட்டிற்கு அழைக்கும் மூர்த்தி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிரை வீட்டிற்கு அழைக்கும் மூர்த்தி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய
கதிரை வீட்டிற்கு அழைக்கும் மூர்த்தி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
திரை வீட்டிற்கு அழைக்கும் மூர்த்தி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி நாம எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் தான் பலம், அதனால் நீ நம்ம வீட்டிற்கு வா என சொல்ல, கதிர் உடனே சரி என சொல்கின்றார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர தனம் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி நீ இல்லாமல் வீடு வீடாக இல்லை, நாம அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கதிரிடம் சொல்கிறார். மூர்த்தி பேசுவதை கேட்டு கதிர் மிகுந்த சந்தோசப்படுகிறார். பின் மூர்த்தி நான் கேட்டால் ஒன்று செய்வியா என கேட்க என்ன அண்ணா என கதிர் கேட்கிறார். அப்போது மூர்த்தி நம்ம வீட்டிற்கு வந்துவிடு என சொல்ல, உடனே முல்லை இதற்கு தான் எதிர்பார்த்து இருந்தது போல சந்தோசப்படுகிறார். மூர்த்தி அண்ணா சொன்ன கேட்ப தான என சொல்ல, கதிர் நீங்க கேட்க வேண்டும் என ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறார். பார்வதி அதை எல்லாம் பார்த்து இனி எல்லாம் அவ்வளவு தான் என நினைக்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

முடிஞ்சது முடிஞ்சது தான் வெட்டி விட்டது எப்படி ஒட்டும் என பார்வதி கேட்க, முல்லை அமைதியாக இருக்க சொல்கிறார். பின் மூர்த்தி அத்தை நாங்க கதிரை அழைத்து செல்கிறோம் என சொல்ல, துரத்தி விடுவீர்கள் அப்புறம் வந்து கூப்பிடுவீங்க என பார்வதி சொல்கிறார். பின் முல்லை அம்மா நீ அமைதியாக இரு என சொல்கிறார். மூர்த்தி முல்லையிடம் நீ என்ன நினைக்கிறாய் என கேட்க, நீங்க கூப்பிட வேண்டும் என ஆசையாக நான் இருக்கிறேன் என சொல்கிறார். பின் முல்லை பார்வதியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். மூர்த்தி அத்தையை அழைத்து செல்லலாம் என சொல்ல ஆனால் முல்லை வேண்டாம் என சொல்கிறார்.

ராமமூர்த்தியை கத்தியால் குத்த போகும் கோபி.. மயூரா மீது கோவப்படும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

Exams Daily Mobile App Download

மறுபக்கம் அனைவரும் வீட்டிற்கு சென்று வாசலில் நிற்கின்றனர். அப்போது ஜீவா மட்டும் உள்ளே சென்று தனத்திடம் பேச வருகிறார். தனம் அவர்களுக்கு என்ன ஆச்சு என கேட்க, நீங்க எந்த நேரத்தில் பத்திரமாக அழைத்து வர சொன்னீர்களோ அவங்க வந்துட்டாங்க என சொல்லி வாசலுக்கு வந்து பார்க்க சொல்கிறார். அனைவரும் வந்து பார்த்து கதிர் முல்லை வந்துள்ளதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் ஐஸ்வர்யா ஆரத்தி எடுத்து உள்ளே வர சொல்கிறார். உள்ளே சென்று அனைவரும் லட்சுமி அம்மா போட்டோவை வணங்குகின்றனர். பின் தனம் கீழே உட்கார்ந்து அழ கதிர் வந்து ஆறுதல் சொல்கிறார். பின் தனம் இனிமேல் என்னை விட்டு போகாதே என சொல்கிறார். கதிரும் சரி என சொல்ல, போட்டியில் என்ன ஆச்சு என மீனா கேட்கிறார், மூர்த்தி இவர்கள் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!