இனி பார்க்கவே முடியாது.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் – வருத்தத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் 4 ஆண்டுகளுக்கு பின் பெரிய மாற்றம் ஒன்று நடந்துள்ளது. அது என்ன என்பது குறித்து அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் இருந்தாலும் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சேனலில் டாப் வரிசையில் இருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதைக்கு முக்கிய காரணமே பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு தான். அந்த வீட்டை வைத்து தான் பல எபிசோடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது அந்த வீட்டை வைத்து பெரிய திருப்பம் ஒன்று வந்துள்ளது. மீனாவின் அப்பா வீட்டை எழுதி வாங்கி கொண்டு அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். மூர்த்தியும் கெளரவம் தான் முக்கியம் என நினைத்து வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு காட்டப்படாது என அந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ஏகப்பட்ட நினைவுகளுடன் அந்த வீடு இருக்கும் நிலையில் இனி அந்த வீடு காட்டப்படாது என்பது சீரியல் நடிகர்களை மட்டுமல்லாது, ரசிகர்களையும் வருத்தமடைய செய்துள்ளது.