தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கஷ்டப்படும் மீனா.. கவலைப்படும் ஜனார்த்தனன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

0
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கஷ்டப்படும் மீனா.. கவலைப்படும் ஜனார்த்தனன் -
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கஷ்டப்படும் மீனா.. கவலைப்படும் ஜனார்த்தனன் - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ப்ரோமோ!
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கஷ்டப்படும் மீனா.. கவலைப்படும் ஜனார்த்தனன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் எல்லாரும் சந்தோசமாக இருப்பதை பார்த்து ஜனார்த்தனன் கோபப்படுகிறார். இந்நிலையில் மீனா கஷ்டப்படுவதை பார்த்து ஜனார்த்தனன் கோபப்படுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்திற்கு அடுத்தடுத்து பல கஷ்டங்கள் வருகிறது. ஆனாலும் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் சந்தோசமாக இருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்தி, கண்ணன், கதிர், ஜீவா ஆகியோர் சேர்ந்து புது இடத்தை பத்திர பதிவு செய்து முடிக்கின்றனர். அதனால் சந்தோஷத்தில் புது இடத்தில் குடும்பத்துடன் எப்படி எல்லாம் வீட்டை கட்ட வேண்டும் என பேசுகின்றனர். அதை தூரத்தில் இருந்து பார்த்த ஜனார்த்தனன் என்ன செய்தாலும் இவர்கள் சந்தோசமாக இருப்பதாக நினைக்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருந்த பொருள்களை எல்லாம் கொண்டு வந்து கொடுத்து மேலும் மூர்த்தி குடும்பத்தை கஷ்டப்படுத்துகிறார். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் முல்லை வீட்டில் குழாய்யில் தண்ணி வராமல் இருக்கிறது. அதனால் ரோட்டு குழாயில் தண்ணீர் பிடிக்க சொல்லி முல்லை சொல்கிறார். மீனாவும் ஐஸ்வர்யாவும் தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கின்றனர்.

ராகினி கழுத்தில் தாலி கட்டிய அர்ஜுன்.. ஜெயிலில் ஆதி – “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் ட்விஸ்ட்!!

Exams Daily Mobile App Download

அப்போது மீனாவால் குடத்தை தூக்க முடியவில்லை. ஐஸ்வர்யா உதவி செய்ய மீனா கஷ்டப்பட்டு குடத்தை தூக்கி கொண்டு வருகிறார். அதை பார்த்த ஜனார்த்தனன், மீனாவிடம் இப்படி எல்லாம் ஏன் கஷ்டப்படுகிறாய் என கேட்கிறார். இப்படி கஷ்டப்பட தான் சுவர் ஏறி குதித்து கல்யாணம் செய்தாயா என கேட்கிறார். இப்படி கேவலமான வாழ்க்கை வாழ உனக்கு வெட்கமாக இல்லையா என கேட்கிறார். உடனே மீனா நான் கஷ்டப்பட காரணமே நீங்க தான் என சொல்கிறார். என் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என மீனா சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!