மீனா அப்பா சொன்ன ஷாக் தகவல்.. வேறு வழியில்லாமல் அந்த முடிவை எடுத்த கதிர், முல்லை – சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் முல்லையும் சமையல் போட்டியில் கலந்து கொண்டு 10 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்துவிட்டனர். ஆனால் அடுத்து வர இருக்கும் பிரச்சனை குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், தற்போது பிரிந்த குடும்பம் மீண்டும் இணைந்துள்ளது. கதிரும் முல்லையும் சமையல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்று இருக்கின்றனர். அதில் கிடைத்த 10 லட்சம் பணத்தை கொண்டு வந்து தனத்திடம் கொடுக்கின்றனர். ஆனால் தனம் பணம் முக்கியம் இல்லை நீங்க மீண்டும் இந்த வீட்டிற்கு வந்தது தான் முக்கியம் என சொல்கிறார். ஆனால் கதிர் முல்லை மீண்டும் இந்த வீட்டிற்கு வந்தது பார்வதிக்கு பிடிக்கவில்லை.
Follow our Instagram for more Latest Updates
அவர் பணத்தை வாங்கி கொண்டு தான் இவர்களை சேர்த்து கொண்டதாக பேச, தனம் பணம் எங்களுக்கு முக்கியம் இல்லை என சொல்கிறார். பிறகு மீனாவின் அப்பா பணத்தை கொடுக்காமல் ஏன் வீட்டிற்கு வந்ததாக கேட்கிறார். உடனே கண்ணன் அண்ணன் 10 லட்சம் பணம் ஜெயித்து இருப்பதாக காட்ட, அதை பார்த்த மீனாவின் அப்பா பெரிய ஷாக் ஒன்றை கொடுக்கிறார்.
தமிழக மீன்வள துறைக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு – பி.டெக் படிப்பையும் சேர்க்க அனுமதி!
Exams Daily Mobile App Download
அதாவது அவர் இது போல போட்டிகளில் கொடுக்கப்படும் செக் எல்லாம் செல்லாது. இதை வங்கியில் போட்டால் பணம் இல்லை என தான் சொல்ல போவதாக சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஒரு வேளை மீனாவின் அப்பா ஜனார்த்தனன் சொல்வது போல நடந்தால் கண்டிப்பாக குடும்பத்தினர் யார் சொன்னாலும் கதிர், முல்லை அந்த வீட்டில் இருக்க மாட்டார்கள்.. தாமதம் ஆனாலும் பரவாயில்லை என கதிர் பணத்தை திரும்ப ஒப்படைக்கவே பார்ப்பார்.. இனி வரும் எபிசோடுகளில் இத்தகைய திருப்பங்கள் அரங்கேற உள்ளன.