பணம் திருடியவனை அடிக்கும் கதிர் & ஜீவா, கண்ணனை பழிவாங்கிய அடியாட்கள் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடை பையன் தான் பணத்தை எடுத்தான் என தெரிந்து கண்ணனிடம் ஜீவா, கதிர் ஆறுதலாக பேசுகின்றனர். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட்களில் என்ன நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் கடையில் பணத்தை எடுக்கவில்லை என மீனா சிசிடிவி கேமரா மூலமாக கண்டுபிடிக்கிறார். மேலும் கடை பையன் பணத்தை எடுப்பதை பார்த்து ஜனார்த்தனன் அவரை அடிக்கிறார். கண்ணனை சொல்லும் போது ஏன் பேசாமல் இருந்தாய் என சொல்லி சத்தம் போடுகிறார். வீட்டிற்கு வந்து மீனா கதிரிடம் பணத்தை கொடுக்கிறார். கதிர் மற்றும் ஜீவா கண்ணனிடம் இது பற்றி சொல்ல வேண்டும் என சென்று கண்ணனை கூப்பிடுகின்றனர்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘மௌன ராகம்’ வரை – சீரியல்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
பணம் கிடைத்து விட்டது. யாரவது இப்படி குறை சொன்னால் நீ எதுவும் பேசாமல் இருக்காதே என அறிவுரை சொல்கிறார்கள். பின் அடிக்கடி என்னை இப்படி கூப்பிட்டு பேசுங்கள் என சொல்ல ஜீவா கதிர் கட்டி அணைத்து அன்பை காட்டுகின்றனர். அடுத்து வரும் எபிசோட் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தனத்திற்கு உடம்பு சரி இல்லாமல் போக அவர் அம்மா வீட்டிற்கு செல்கிறார். பின் கண்ணனை மாட்டி விட்டதால் ஜீவா கதிர் கடை பையனை அடிக்கின்றனர்.
இந்தியாவில் தீவிரமெடுக்கும் ஓமைக்ரான் பரவல் – 5 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!
உடனே கோவப்பட்ட அவன் கண்ணன் தனியாக சென்று கொண்டிருக்கும் நேரம் பார்த்து அடியாட்களுடன் சேர்ந்து கண்ணனை அடிக்கிறான். கண்ணனால் திருப்பி அடிக்க முடியாமல் அவர் மோசமான நிலைக்கு சென்றுவிடுவது போல காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின் அவரை மருத்துவமனையில் சேர்க்க, கண்ணன் நிலைமை இப்படி ஆகிவிட்டது என தனம் வருத்தப்படுவார். அதனால் கண்ணனை வீட்டிற்குள் சேர்த்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் ஒரு வாரத்தில் கண்ணன் மருத்துவமனை காட்சிகள் காட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.