விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் கிளைமாக்ஸ் இது தான் – யாரும் எதிர்பார்த்திராத திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதையில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஜனார்த்தனன் மூலமாக மூர்த்தி குடும்பத்தில் சிக்கல் வர, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருவார்கள் என்பது தான் கதையின் முடிவாக இருக்க போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்ந்து சென்றாலும், மூன்று ஆண்டுகளாக கதையில் வில்லன் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது மீனாவின் அப்பா ஜனார்த்தனன் வில்லனாக மாறி இருக்கிறார். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரிய வீடு கட்ட வேண்டும் என முயற்சி எடுத்து வருகின்றனர். அதை ஜனார்த்தனன் கெடுக்க இருப்பது எல்லாம் இனி வரும் கதையில் திருப்பமாக வர இருக்கிறது.
சகோதரர் வெட்டியதால் உடலில் 175 தையல்கள்.. ரத்த வெள்ளத்தில் ஜி.பி.முத்து – ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
ஜனார்தனனின் சூழ்ச்சிகளை தாண்டி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பெரிய வீடு கட்டி முடிக்க, அதில் ஏற்படும் பிரச்சனைகளை குடும்பத்தினர் எப்படி சேர்ந்து சமாளிக்க போகிறார்கள் என்பது எல்லாம் கதையின் கிளைமேக்ஸ் காட்சிகளில் காட்டப்பட இருக்கிறது.மேலும் குடும்பத்தினர் பிரச்சனைகள் வந்தாலும் ஒற்றுமையை கைவிடாமல் போராடி புது வீட்டில் காலடி எடுத்து வைப்பது தான் இந்த சீரியலின் முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கடைசியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சவாலில் ஜெய்த்துவிட, ஜனார்தனனும் மனம் திருந்தி வர குடும்பமே சந்தோசமாக இருப்பது தான் இந்த சீரியலின் கிளைமாக்ஸில் வர உள்ளது.