கதிரால் கொடூரமாக தாக்கப்படும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்தகட்ட கதைக்களம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜனார்த்தனன் கடையில் பணத்தை திருடிய பையனை கதிர் அடிக்க, அவன் சில அடியாட்களை வைத்து கண்ணனை பழிவாங்குவது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சமீப காலமாக எவ்வித குழப்பங்களும், சண்டடைகளும் இல்லாமல் நகர்ந்து வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது அடிதடியுடன் கூடிய ஒரு புதிய திருப்பம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜனார்த்தனன் கடையில் வேலை செய்து வந்த கண்ணன், கடை பணத்தை திருடி விட்டதாக கூறி துரத்தப்பட, கதிர் அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்கிறார். அதே நேரத்தில் அந்த பணத்தை தொலைத்து விட்டதாக தனது குடும்பத்தாரிடம் கூறும் கதிர் அதற்காக திட்டும் வாங்குகிறார்.
வித்தியாசமாக ரீல்ஸ் செய்துள்ள ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இதற்கிடையில் கண்ணனின் பண விஷயம், கஸ்தூரி மூலமாக மூர்த்தி வீட்டுக்கு தெரியவர, மீனா ஜனார்த்தனனின் கடைக்கு சென்று பணத்தை எடுத்த நபர் யார் என்கிற உண்மையை கண்டறிகிறார். இதனுடன் இந்த பண பிரச்சனை முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடில் ஜனார்த்தனன் கடையில் பணத்தை திருடிய பையன் மீண்டுமாக கதிர், ஜீவாவின் வழியில் குறுக்கிடுகிறான். இப்படி பேச்சு வாக்கில் கதிர் அவனை ஆத்திரத்தில் அடித்து விட, உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என கோபத்தில் கத்திவிட்டு செல்கிறான்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
இதற்கு பின்பாக கதிரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு அந்த பையன் கண்ணனை அடித்து உதைத்து காயப்படுத்துவது போல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் தனத்தின் அம்மா காமாட்சிக்கு உடல்நிலை சரி இல்லை என்று சொல்லி தனம் அவரது வீட்டிற்கு செல்ல இருக்கிறார். இந்த காட்சிகளுடன் வெளியாக இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புதிய கதைக்களம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.