பாண்டியன் பிறந்தநாளை சஸ்பென்ஸ் உடன் கொண்டாட நினைக்கும் குடும்பம்.. சந்தேகப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
பாண்டியன் பிறந்தநாளை சஸ்பென்ஸ் உடன் கொண்டாட நினைக்கும் குடும்பம்.. சந்தேகப்படும் தனம் - இன்றைய
பாண்டியன் பிறந்தநாளை சஸ்பென்ஸ் உடன் கொண்டாட நினைக்கும் குடும்பம்.. சந்தேகப்படும் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
பாண்டியன் பிறந்தநாளை சஸ்பென்ஸ் உடன் கொண்டாட நினைக்கும் குடும்பம்.. சந்தேகப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் அனைவரும் தனம் மூர்த்திக்கு தெரியாமல் பாண்டியன் பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். அப்போது மூர்த்தியை கடையிலும் தனத்தை ஹோட்டலிலும் இருக்க வைக்க கஷ்டப்பட்டு முயற்சி செய்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் சீரியலில் சீரியலில் மூர்த்தி தனம் கோவிலுக்கு சென்றதும் குடும்பத்தில் அனைவரும் பாண்டியன் பிறந்தநாளை நன்றாக கொண்டாட வேண்டும் என திட்டமிடுகின்றனர். சாப்பாட்டிற்கு என்ன செய்வது என கேட்க, கதிர் நம்ம ஹோட்டலில் வாங்கிக்கலாம் என சொல்கிறார். ஆனால் அப்படி வாங்கினால் தனத்திற்கு தெரிந்து விடும் என்பதால் வேண்டாம் என ஜீவா சொல்கிறார். பின் கதிர் நான் கேக் வாங்குகிறேன் என சொல்ல, கண்ணன் அப்போ நான் என்ன செய்வது என கேட்கிறார். அப்போது கதிர் வழக்கம் போல நீ அலங்காரம் செய் என சொல்கிறார். பின் சாயங்காலம் வரை அண்ணனையும் அண்ணியையும் வீட்டிற்கு வர விடாமல் செய்ய வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மறுபக்கம் மூர்த்தி ஜீவாவை டெலிவெரி கொடுக்க சொல்ல , ஆனால் சரவணனை அழைத்து ஜீவா டெலிவரி கொடுக்க சொல்கிறார். பின் மூர்த்தி ஏன் அவன் போனால் என்ன என கேட்க எங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாக ஜீவா கதிர் சொல்கின்றனர். பின் பிறந்தநாள் வேலை நிறையா இருக்கிறது என ஜீவா சொல்ல, அண்ணனிடம் சொல்லிவிடுவோமா என பேசிக் கொள்கின்றனர். அவர்கள் பேசியதை அண்ணாச்சி கேட்டுவிடுகிறார். அவர் மூர்த்திக்கு தெரியாமல் என்ன செய்ய போறீங்க என கேட்க இன்னைக்கு பாண்டியன் பிறந்தநாள் அதனால் அண்ணனிற்கு தெரியாமல் கொண்டாட போகிறோம்.

நீங்க அண்ணனை சாயங்காலம் வரை வீட்டு பக்கம் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார். அண்ணாச்சி சரி என சொல்கிறார்.பின் மூர்த்தியிடம் சொல்லிவிட்டு கதிர் மற்றும் ஜீவாவும் கிளம்புகின்றனர். மறுபக்கம் பெண்கள் தனத்தை எப்படி எல்லாம் வரவிடாமல் செய்யலாம் என திட்டமிடுகின்றனர். அப்போது தனம் வீட்டிற்கு கிளம்ப அனைவரும் தடுக்கின்றனர். பாண்டியன் பிறந்தநாளுக்கு கொண்டாட்டம் தான் இல்லை நான் அவனுடன் இருக்க வேண்டும் என தனம் சொல்ல, ஆனால் அனைவரும் வேண்டாம் என சொல்கின்றனர். நீங்க தான் ஹோட்டலை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என சொல்லி தனத்தை இருக்க வைக்கின்றனர்.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (டிச.8) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மண்டாஸ் புயல் எதிரொலி!

பின் மீனா நாங்க சென்று ட்ரெஸ் வாங்கி வருகிறோம். நீங்க எல்லாரும் வீட்டிற்கு போங்க என சொல்கிறார். உடனே தனத்திடம் சமாளித்துவிட்டு அனைவரும் கிளம்ப தனத்திற்கு சந்தேகம் வருகிறது. ஆனால் அவர்கள் எதுவும் சொல்லாமல் பாண்டியன் பிறந்தநாளை கொண்டாட கிளம்பிவிடுகின்றனர். தனம் கஸ்டமரை கவனித்து கொண்டு இருக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!