தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைத்த பாக்கியா, கோவப்பட்ட கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் தனமும் ராதிகா வீட்டிற்கு வந்து பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கின்றனர். பின் கோபி வர முடியாது என சொல்ல, ஆனால் கோபி முடியாது என சொல்கிறார்.
மகா சங்கமம்:
இன்று மகா சங்கமம் சீரியலில், பாக்கியாவும் தனமும் ராதிகா வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மயூரா விளையாட பாக்கியாவை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் ராதிகா வர பாக்கியாவை பார்த்து சந்தோசப்படுகிறார். என் மாமாவிற்கு 75வது பிறந்தநாள் விழா நாளைக்கு கொண்டாட இருக்கின்றனர். நீங்க கண்டிப்பாக வர வேண்டும் நீங்க மட்டுமல்ல மயூராவையும் அழைத்து கொண்டு வருகிறேன் என சொல்கிறார். பின் பாக்கியா நீங்க கல்யாணம் செய்ய போகும் மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டு வர வேண்டும் என சொல்ல, ராதிகா கண்டிப்பாக என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் தனத்திடம் ராதிகா பட்ட கஷ்டம் பற்றி சொல்கிறார். மறுபக்கம் ஜீவாவும் செழியனும் பேசிக் கொள்கின்றனர். அப்போது செழியன் சின்ன வயதில் இருந்தே சொந்தக்காரனாக வீட்டிற்கு போனதில்லை அதனால் தான் இப்படி என சொல்கிறார். பின் கோபி ராதிகா வீட்டிற்கு வர டீச்சர் வந்தார்கள் நாளை அவருடைய மாமாவிற்கு பிறந்தநாள் விழா அதனால் நம்மை அழைத்திருக்கிறார் என சொல்கிறார். பின் கோபி வேண்டாம் என சொல்ல ஆனால் கோபி முடியாது என சொல்கிறார். உடனே ராதிகாவுக்கு கோவம் வருகிறது, பாக்கியா வீட்டிற்கு வராமல் இருந்தால் நான் உங்களுடன் பேசவே மாட்டேன் என சொல்கிறார்.
அதை கேட்டு கோபிக்கு கோவம் வருகிறது. ராதிகாவை கூப்பிடாதே என சொல்லியும் கேட்காமல் ஏன் இப்படி செய்தால் என நினைத்து கோபி கோபப்படுகிறார். பின் ஈஸ்வரி எல்லாருக்கும் சேலை எடுக்க வேண்டும் என பாக்கியாவிடம் சொல்கிறார். ஆனால் அவர்களிடம் சொல்லாதே என சொல்கிறார். பின் மூர்த்தியும் தனமும் ராமமூர்த்திக்கு மோதிரம் வாங்க வேண்டும் என நினைக்கிறார். பின் செழியனும் ஜீவாவும் பேங்க் செல்கின்றனர். அப்போது எப்படி கூட்டு குடும்பமாக இருக்கீங்க என கேட்க அதில் நிறைய நல்லது இருக்கிறது என செழியன் சொல்கிறார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – சலுகைகளை பெற இந்த அப்டேட் முக்கியம்!
பின் மீனா கூட்டு குடும்பத்தில் நிறைய நல்லது இருக்கிறது ஆனால் பணம் விஷயத்தில் நன்றாக இல்லை என சொல்கிறார். பின் மூர்த்தி தனம் கதிர் மூர்த்தி நகைக்கடைக்கு செல்கின்றனர். அப்போது ஆட்டோகாரர் நிறைய பணம் கேட்க அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கதிர் மூர்த்தி ஆட்டோ டிரைவரிடம் சண்டை போடுகின்றனர். பின் எழில் வந்து அவர்களை சமாதானம் செய்துவிடுகிறார். எழில் நண்பரிடம் கார் வாங்கி கொண்டு வருகிறார். பின் கோபி கோவமாக வீட்டிற்கு வர பாக்கியாவை கூப்பிடுகிறார். நான் உன்னிடம் ராதிகாவை கூப்பிட வேண்டாம் என சொன்னேன் ஆனால் ஏன் கூப்பிட்டாய் என கேட்கிறார். உங்களுக்கு எப்படி அது தெரியும் என பாக்கியா கேட்க உடனே மூர்த்தி தனமும் வருகிறார். பின் பாக்கியா எதுவும் இல்லை என சொல்லி சமாளிக்கிறார். ஆனால் செல்வி அவர்கள் எப்போ பார்த்தாலும் சண்டை போடுவார்கள் என சொல்கிறார்.