கோவிலில் அமிர்தாவை பார்த்த கதிர் முல்லை, ராதிகாவை பிறந்தநாளுக்கு அழைத்த பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
கோவிலில் அமிர்தாவை பார்த்த கதிர் முல்லை, ராதிகாவை பிறந்தநாளுக்கு அழைத்த பாக்கியா - இன்றைய
கோவிலில் அமிர்தாவை பார்த்த கதிர் முல்லை, ராதிகாவை பிறந்தநாளுக்கு அழைத்த பாக்கியா - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
கோவிலில் அமிர்தாவை பார்த்த கதிர் முல்லை, ராதிகாவை பிறந்தநாளுக்கு அழைத்த பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் சீரியலில், கதிரும் முல்லையும் கோவிலுக்கு போக சொல்லி பாக்கியா சொல்கிறார். அவர்களுடன் எழிலும் கூட செல்கிறார், அப்போது அங்கே அமிர்தாவை அவர்கள் பார்க்கின்றனர். பின் தனமும் பாக்கியாவும் ராதிகாவை பார்த்து பிறந்தநாளுக்கு கூப்பிட செல்கின்றனர்.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமம் சீரியலில், கோபியும் மூர்த்தியும் வாக்கிங் செல்கின்றனர். அப்போது மூர்த்தி செருப்பு போடாமல் எப்படி நடக்கிறார் என கோபி கேட்க அப்படியே நடந்து பழகிவிட்டது என சொல்கிறார். பின் கோபி என்னால் முடியாது என சொல்ல நாங்க உடல் உழைப்பை கொடுத்து வேலை செய்கிறோம் ஆனால் நீங்க அப்படி இல்லை என சொல்ல கோபி அப்போ நாங்க வேலை செய்யவில்லை என சொல்கிறீர்களா என கேட்கிறார். ஆனால் நீங்க மூளையை வேலை வாங்குறீங்க நாங்க உடல் உழைப்பை கொடுக்கிறோம் என சொல்கிறார். பின் கோபியும் மூர்த்தியும் உடற்பயிற்சி செய்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

பின் பாக்கியாவும் தனமும் அலுவலகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் உங்க அத்தை இருக்கும் போதே வந்து பாத்திருக்கலாம் என சொல்கிறார். பின் தனம் முல்லைக்கு குழந்தை இல்லாமல் இருப்பதால் வருத்தப்படுகிறார். அப்போது ஈஸ்வரி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போக சொல்கிறார். பின் ஜீவா கடை விஷயமாக பேச மூர்த்தி அவனை நம்பி விட்டு வந்துருக்கோம் என கேட்கிறார். அதெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என சொல்கிறார். அப்போது தாத்தா நடந்து வர மூர்த்தி பதட்டப்படுகிறார். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லையே என ஈஸ்வரி சொல்கிறார்.

பாக்கியா முல்லை கதிரை கோவிலுக்கு போக சொல்கிறார். நாங்களும் வருவோம் ஆனால் பிறந்தநாள் விழாவிற்கு சிலரை கூப்பிட வேண்டியதாக இருக்கிறது என சொல்கிறார். பின் கதிர் முல்லை உடன் எழில் வர கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது எழில் குழந்தை இல்லாததை நினைத்து வருத்தப்படாதீங்க என சொல்கிறார். பின் அமிர்தா வர எழில் சென்று பேசுகிறார். கதிர் முல்லையிடம் அமிர்தாவை எழில் அறிமுகப்படுத்தி வைக்கிறார். கதிர் இது உன் அக்கா குழந்தையா என கேட்க இல்லை என் குழந்தை தான் என சொல்கிறார்.

ஆயிஷா பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன கண்ணம்மா, ஆப்ரேசன் செய்ய தயாராகும் பாரதி – இன்றைய எபிசோட்!

சின்ன பெண்ணாக இருக்கிறாய் என கேட்க ஆமாம் சிறு வயதில் திருமணம் முடிந்துவிட்டதாக சொல்கிறார். பின் கணவர் எங்கே என கேட்க அவர் இல்லை. திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் இறந்துவிட்டார் என சொல்ல பின் அமிர்தா கிளம்பிவிடுகிறார். முல்லை எனக்கு இருக்கும் கஷ்டத்தை விட இவங்க கஷ்டம் குறைவாக இருக்கிறது என சொல்கிறார். பின் மூர்த்தி ஜீவா சாப்பிட வருகின்றனர். அப்போது கோபியும் வர அவர் குறைவாக சாப்பிடுகின்றனர். பின் மீனாவும் ஐஸ்வர்யாவும் அங்கையும் வந்து சண்டை போடுகின்றனர். மறுபக்கம் பாக்கியாவும் தனமும் ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். பாக்கியா மாமாவின் 75வது பிறந்தநாள் நீங்க கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். நீங்க மட்டும் இல்லை நீங்க கல்யாணம் செய்ய போகிறவரை கூட்டிக் கொண்டு போக வேண்டும் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!