விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சுசித்ராவிற்கு நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் உருக்கம்!
பாக்கியலட்சுமி தொடரில் இல்லத்தரசியாக நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்ட பாக்கியா என்ற சுசித்ரா விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஷேர் செய்து ரசிகர்களை மனம் உருக வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சுசித்ரா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் மோஸ்ட் சீரியலில் ஒன்றாகவும், டி ஆர் பி ரேட்டிங்கில் எப்பொழுதும் டாப் 5 க்குள் வரும் தொடரில் ஒன்றாகவும் ஒளிபரப்பாகி பார்வையாளர்களின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகமாக்கி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இல்லத்தரசியாக நடித்து ஒவ்வொரு வீட்டு இல்லத்தரசிகளின் மனதை வென்றவர் சுசித்ரா. இவர் சீரியலில் இல்லத்தரசியாக படும் கஷ்டங்களையும், அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும், அவரது பொறுப்புகள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்தும் வகையில் மிகவும் அழகாக நடித்து வருகிறார்.
ExamsDaily Mobile App Download
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் எப்படியாவது தன்னுடைய சமையல் தொழிலை விரிவாக்க வேண்டும் என்று பாக்கியா முயற்சி செய்யும் நேரத்தில் கோபி அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருவது போன்று தொடர் நகர்கிறது. இவ்வாறு சீரியலில் படும் கஷ்டங்கள் போலவே நிஜ வாழ்க்கையிலும் பட்ட கஷ்டங்களை அவர் தெரிவித்துள்ளார். அதாவது அவரது நடிப்பால் சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது வழங்கும் விழாவில், அனைவரின் மனம் கவர்ந்த பேவரட் நாயகி என்ற விருதை நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியலுக்காக பெற்றுள்ளார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வனிதாவின் புதிய அவதாரம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விருது வாங்கும் மேடையில் மிகவும் எமோஷனலாக பாக்கியா தனது அம்மா எப்பொழுதும் தொடர்ந்து உழைத்து கொண்டே இருந்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி கொண்டே இருப்பார். அது இப்பொழுது உண்மை ஆகி என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டது. அதனால் இந்த விருதை என் அம்மாவுக்காக சமர்ப்பிக்கிறேன். மேலும், இந்த சந்தோச நிகழ்வை காண என் அம்மா இப்போ என்கூட இல்லை என்று கண்ணீர் மல்க பேசி பார்வையாளர்களின் மனதை கரைய செய்து விட்டார்.