விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை வீட்டில் நடந்த துயர சம்பவம் – திரைத்துறையினர் இரங்கல்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜெனிஃபர் தன்னுடைய அப்பா மறைவு பற்றி உருக்கமாக அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய அப்பா டான்ஸ் மாஸ்டர் சின்னா ஆவார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் டாப் இடத்தை பிடித்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். சீரியல் தொடக்கத்தில் நடிகை ஜெனிஃபர் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின் இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருந்ததால் அவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். சீரியலை விட்டு விலகினாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமுக வலைதளப்பக்கத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெனிஃபர் தற்போது கண்ணீருடன் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதில் தன்னுடைய அப்பா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவருடைய அப்பா கமல், ரஜினி என பல டாப் நடிகர்களுடன் பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் சின்னா தான். சீரியலை விட்டு ஜெனிஃபர் விலகி இருந்தாலும் அவர் எப்போது ரீஎன்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். சிறு வயதில் இருந்தே ஜெனிஃபர் நடிப்பு, டான்ஸ் என பல திறமைகளை கொண்டவர். அவருக்கு சினிமா ஆர்வம் வர முக்கிய காரணமே அவருடைய அப்பா தான் என பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.
படுத்த படுக்கையாகும் மூர்த்தி, கர்ப்பமான கதிர் மனைவி முல்லை – ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் கலை துறையில் நல்ல பெயர் பெற்ற அவருடைய அப்பா இன்று இயற்கை எய்தினார் எனவும் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்த அவர் தற்போது இறந்து விட்டதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவருடைய மறைவு நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திரைத்துறையை சேர்ந்த பலர் அவருடைய அப்பாவிற்கு இரங்கலை தெரிவித்து இருக்கின்றனர். பலரும் எனக்கு ஃபோன், மேசேஜ் செய்கிறீர்கள். என்னால் பதில் அளிக்க முடியவில்லை சாரி என ஜெனிஃபர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.