விஜய் டிவி மௌன ராகம் சீரியல் நடிகைகளுக்கு ஒரே நேரத்தில் வந்த குட் நியூஸ் – அவர்களே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி மௌன ராகம் சீரியல் சீசன் 1 மற்றும் சீசன் 2வில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்த பேபி கிருத்திகா மற்றும் நடிகை ரவீனா இருவரும், சினிமாவில் நடிக்க இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட பதிவை பற்றி இங்கு பார்க்கலாம்.
சினிமா வாய்ப்பு
சின்னத்திரையில் விஜய் டிவிக்கு தனி மவுசு இருந்தாலும் அதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில், இரண்டாவது சீசன் தற்போது வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் முதல் சீசனில் சக்தி கதாபாத்திரத்தில் பேபி கிருத்திகா நடித்து வந்தார். அவர் அந்த சீரியலுக்கு பின் ஜீ தமிழில் சூப்பர் Mom நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
Emotional-ஆக நடந்த சன் டிவி செவ்வந்தி சீரியல் நாயகியின் வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பேபி கிருத்திகா விரைவில் சினிமாவில் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதே போல மௌன ராகம் சீசன் 2வில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரவீனாவும், சினிமாவில் ‘வதனா’ என்ற படத்தில் நடித்து வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்த இரண்டு சின்னத்திரை பிரபலங்களின் படங்களும் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.