சித்ராவை காதலிப்பதாக ஏமாற்றி கொலை செய்த ஹேம்நாத் – கதறும் பெற்றோர்கள்! ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக பிரபலமான சித்ரா கடந்த ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோர் கதறும்படியான செய்தி தற்போது பரவலாக வைரலாகி வருகிறது.
சித்ராவின் கொலை:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் சித்ரா. இவர் கடந்த ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்கிற விஷயம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும், உண்மையாகவே சித்ரா தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல கேள்விகள் எழுந்தன. இதனால் சித்ராவின் கணவரான ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு ஹேம்நாத் ஜாமினில் வெளிவந்தார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் – ரசிகர்கள் உற்சாகம்!
சித்ரா இறந்த பிறகும் கூட துளியும் வருத்தம் இல்லாமல் பல பெண்களுடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக ஹேம்நாத் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர்கள் மற்றும் சித்ராவின் நண்பர்களும் கூறி வந்தனர். சித்ரா தான் ஹேம்நாத்தை நம்பி ஏமாந்துவிட்டார். எப்படி ஹேம்நாத்தை காதலித்தார் என்பதே தெரியவில்லை. ஹேம்நாத்திற்கு அதிகமாக குடி பழக்கம் இருக்கிறது மற்றும் பல பெண்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். சித்ரா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் சித்ராவிற்கும் ஹேம்நாத்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
நிச்சயதார்த்தம் நடந்தது கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம் என நண்பர்கள் கூறுகிறார்கள். எதிர்பார்த்தபடி சித்ராவை ஹேம்நாத் கொலை செய்துவிட்டான். சித்ராவின் இழப்பை தற்போது வரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சித்ராவின் பெற்றோரும் சித்ராவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி கொண்டிருக்கின்றனர். சித்ராவை தேவதை மாறி பார்த்துக் கொள்வேன் எனக் கூறிவிட்டு தேவதை போல அவளது புகைப்படத்திற்கு மாலை போட வைத்து விட்டாரே என சித்ராவின் பெற்றோர் கதறி கொண்டிருக்கின்றனர். மேலும், என் கண் முன்னாடியே மற்ற பெண்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருக்கிறார். ஆனால் கடவுளுக்கும் சித்ராவுக்கு மட்டும் தான் தெரியும் அன்று இரவு என்ன நடந்தது என்று கூறுகின்றனர்.