விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியல் 300 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் மக்கள் மத்தியில் அதிகம் ரசித்து பார்க்கப்படும் சீரியல் என்றால் அது, “பாக்கியலட்சுமி” தான். ஒரு குடும்ப பெண்ணின் தேவைகள், ஆசைகள் மற்றும் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று அனைத்தையும் அழகாக எடுத்துக்காட்டி இருப்பர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா புதிதாக ஒரு மசாலா பிசினஸ் ஆரம்பிக்கிறார். அந்த பிசினஸ் நன்றாக வளர்ச்சி அடைய அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
‘மெல்போர்ன்’ திரைப்பட திருவிழா – சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு! ரசிகர்கள் வாழ்த்து!
இது ஒரு பக்கம் இருக்க, பாக்கியா வீட்டினர் யாருக்கும் தெரியாமல் டூவீலர் கற்று கொள்கிறார். தற்போது டூவீலர் ஒட்டி கீழே விழுந்து காலை உடைத்து கொள்ளுகிறார். இதனால் வீட்டு வேலைகளை செய்ய முடியாமல் மிகவும் சிரமம் அடைகிறார். குடும்பத்தினர் அனைவரும் அவரது நிலையினை பார்த்து அவருக்கு உதவி செய்யாமல் குறை கூறுகின்றனர். ஆனால், எழில் மட்டும் அவருக்கு ஆறுதலாக பேசுகிறார் மற்றும் உதவியும் செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பாக்கியாவின் கணவர் கோபி வீட்டினருக்கு தெரியாமல் தனது தோழி ராதிகாவிற்கு ஆறுதலாக இருந்து வருகிறார். இதனை பார்க்கும் ராதிகாவின் கணவர் ராஜேஷிற்கு கோபம் வந்து, அவர் கோபி மற்றும் ராதிகா இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
இப்படி பல விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் காரணமாக இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்து சாதனை செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சீரியல் குழுவினரும் இதனை கொண்டாடி உள்ளனர்.