விஜய் டிவி சீரியல் நடிகை ஆலியா மானசாவிற்கு கல்லூரியில் நேர்ந்த சோகம் – ரசிகர்கள் ஷாக்!
ராஜா ராணி சீரியல் மூலமாக எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை சம்பாரித்து வைத்திருக்கும் ஆலியா அவரது கல்லூரியில் 17 அரியர் வைத்திருக்கிறார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆலியா மானசா:
படிப்பில் சிறந்து விளங்கினால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று சொல்லி சொல்லி தான் சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் வளர்த்திருப்பார்கள். ஆனால், நம்முடைய மதிப்பெண் ஒரு காலத்திலும் நமது வாழ்க்கையை தீர்மானித்துவிடாது. அதற்கு சிறந்த உதாரணம் தான் ஆலியா மானசா. இவர் பள்ளியில் நன்றாக படித்திருக்கிறார். ஆனால், பெற்றோரின் கட்டாயத்தால் மட்டுமே விருப்பமே இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண்ணும் வாங்கியிருக்கிறார். ஆலியாவிற்கு பள்ளியில் படிக்கும்போதே மாடலிங்கில் தான் ஆர்வம் இருந்திருக்கிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!
17 வயதில் இருந்தே மாடலிங் செய்ய ஆரம்பித்துவிட்டார். மாடலிங் மீதுள்ள ஆர்வத்தால் கல்லூரி படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் 17 அரியர் வாங்கியிருக்கிறார். மாடலிங் தான் முழுக்க முழுக்க தனது வாழ்க்கை என்று நினைத்து பாதியிலேயே கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டார். மாடலிங் செய்து கொண்டிருந்ததன் மூலமாக ஆலியாவிற்கு பல சீரியல் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இதன் பின்பு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் அறிமுகமானார்.
Exams Daily Mobile App Download
சீரியலில் அறிமுகமாகி சில மாதங்களிலேயே ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இந்த சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். பிரசவத்திற்காக மட்டுமே சீரியலில் இருந்து விலகினார். ஆலியாவை வைத்து சீரியல்கள் மற்றும் விளம்பர திரைப்படங்கள் இயக்க இயக்குனர்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றனர். கல்லூரியில் 17 அரியர் வைத்த இவர் தற்போது வாழ்க்கையில் இவ்வளவு சம்பாரித்து கொண்டிருக்கிறாரா என ரசிகர்கள் வாயடைத்துவிட்டனர்.