திடீரென தொடரை விட்டு விலகிய “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – இனி இவருக்கு பதில் இவர்! ரசிகர்கள் ஷாக்!

0
திடீரென தொடரை விட்டு விலகிய
திடீரென தொடரை விட்டு விலகிய "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகை - இனி இவருக்கு பதில் இவர்! ரசிகர்கள் ஷாக்!
திடீரென தொடரை விட்டு விலகிய “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – இனி இவருக்கு பதில் இவர்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா கணேஷ். அவர் செல்லம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் நிலையில், தற்போது அவர் சீரியலை விட்டு விலகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

செல்லம்மா சீரியல்:

சின்னத்திரையில் தனக்கொரு தனி இடம் பிடித்த சேனல் தான் விஜய் டிவி. அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல் தான் பாக்கியலட்சுமி. பெண்களின் பெருமையை பற்றிய கதையுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஜெனி கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். அவர் பாக்கியாவிற்கு துணையாக பல இடங்களில் இருப்பதால் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ஊரை விட்டு சென்ற கண்ணம்மா.. தேடி அலைந்து கண்டுபிடிக்கும் பாரதி – பரபரப்பு திருப்பங்களுடன்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் திவ்யா கணேஷ் விஜய் டிவியில் மாற்றொரு சீரியலான செல்லம்மா சீரியலில் வில்லியாக நெகட்டிவ் ரோலில் மேகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கதையில் மேகா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திவ்யா கணேஷ் அந்த சீரியலை விட்டு விலகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக ஸ்ரேயா என்பவர் நடிக்க இருக்கிறார். இன்று முதல் புதிய மேகாவாக ஸ்ரேயா நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. செல்லம்மா சீரியலில் நல்ல கதாபாத்திரத்தில் இருந்து நடிகை திவ்யா விலக என்ன காரணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!