விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பாக்கியாவிடம் சிக்கப்போகும் கோபி!
பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில நாட்களாகவே சுவாரசியம் குறையாமல் பல திருப்பங்களுடன் நகர்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடந்துள்ள அதிரடி மாற்றங்களால் கோபி சிக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதைக் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது புது புது திருப்பங்களுடன் நகர்கிறது. நேற்றைய எபிசோட்டில் ஒரு பக்கம் பெற்ற மகள் வெளியே செல்ல அழைக்க இன்னொரு பக்கம் காதலியின் மகள் அழைக்க இரண்டுக்கும் மத்தியில் கோபி இறுதியாக காதலியின் கோபத்துக்கு அடிபணிந்தவனாக ஒத்துழைக்கிறார். அதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் கோபி தனது வீட்டிற்கு வந்து அவரது அன்பு மகள் இனியாவிடம் எங்க போறீங்க என கேட்கும் போது, அதை இன்னும் எழில் அண்ணன் சொல்லவில்லை. சஸ்பென்ஸா வைச்சு இருக்கு நாளைக்கு தான் சொல்லும் என கூறுகிறாள்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த ஹேமா மீனா – Youtube இல் வெளியிட்ட வீடியோ!
மறுநாள் காலையில் பாக்கியா 4 மணிக்கு எழுந்து காலை உணவு, மதிய சாப்பாடு என அனைத்தயும் செய்து கொண்டிருக்க வீட்டில் உள்ள அனைவரும் வெளியே செல்லும் ஆர்வத்தில் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் கோபி வீட்டில் நேற்று சொன்ன அதே பொய் அதாவது ஆபிசை காரணம் காட்டி வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிறார். அந்த பக்கம் ராதிகா மற்றும் மயூ கிளம்பி ரெடியாகி இருந்தார்கள். அவர்களிடம் வாங்க சாப்பிட்டு கிளம்பலாம் என்று சொன்னவுடன் ராதிகா நான் எதுவும் சமைக்கல வெளில தான் சாப்பிடணும் என்று சொல்கிறாள்.
சரி ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம் என சொல்லிவிட்டு கோபி வெளியில் வரும்போது, ராதிகா அவனிடம் சாவியை கொடுத்து நீங்க பூட்டிட்டு வாங்க என சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிடுகிறாள். கோபி என்ன இவ எல்லாத்தையும் நம்மள செய்ய சொல்றா, அங்கு எல்லாம் பாக்கியா தான செய்வா என்று மனதுக்குள் நினைக்கிறார். வெளியே சென்று சில பொருள்கள் வாங்க மயூ,ராதிகா மற்றும் கோபி ஒரு கடைக்கு செல்கிறார்கள். அதே ரிசார்ட்டில் பாக்கியாவும் இருக்க, கடைக்கு வெளியே செல்வி ,ஈஸ்வரி மற்றும் அவரது கணவரும் நின்று கொண்டிருக்க இத்துடன் இன்றய எபிசோட் முடிவடைகிறது. கூடிய விரைவில் கோபி சிக்கப்போவதாக எதிர் பார்க்கப்படுகிறது.