விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இன்றைய எபிசோட்டில் நடந்த சிறப்பான சம்பவம் – ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில நாட்களாகவே ஒவ்வொரு நாளும் புதுப் புது திருப்பங்களோடு நகர்ந்து பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டை சுவாரசியம் குறையாமல் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் இல்லத்தரசிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் பாக்கியலட்சுமி. ஆனால் கடந்த சில நாட்களாகவே கோபியை தான் மையமாக கொண்டு சீரியல் நகர்ந்து வந்தது. தற்போது புதுவிதமாக எழில், அமிர்தா காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பாகிறது. இன்றைய எபிசோட்டில் அமிர்தாவை ஒரு ரவுடி பிரச்சனை செய்ததை தடுக்க முயன்ற அப்பாவை ரவுடி தள்ளி விடுகிறார். அவர்கள் வீட்டிற்கு வந்ததை அறிந்த அமிர்தாவின் அம்மா பதட்டப்படுகிறார்.
விஜய் டிவியில் “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து ஆலியா மானசா விலக காரணம் – சஞ்சீவ் சொன்ன விளக்கம்!
இந்த பக்கம் கோபியும், பாக்கியாவும் பதினோராவது வகுப்பில் இனியாவை சேர்க்க பள்ளிக்கு செல்கிறார்கள். அந்த நேரம் இனியா கோபியிடம் அப்பா நான் நல்ல மார்க் எடுத்ததுக்கு ட்ரீட் வைங்க என கேட்டதும்,சரி ஹோட்டல் போகலாம் என கோபி சொல்லும் போது, வீட்ல அவ்வளவு சமைச்சு வச்சு இருக்கேன் என பாக்யா கூறுகிறாள். உடனே இனியா அதெல்லாம் வேண்டாம் அப்பா , அம்மா ரொம்ப போர் இவங்களையும் நம்ம ஹோட்டல் கூட்டிட்டு போனா அத சாப்பிடாத, இத சாப்பிடாதனு ஏதாச்சு சொல்லிட்டே இருப்பாங்க என கூறியதும் கோபியும் பாக்கியாவை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புகிறார்.
ஹோட்டல் போனதும் பாக்யாவை பற்றி அப்பாவும் மகளும் பேசிக் கொண்டிருக்கும் போது, இந்த சமயத்தை பயன்படுத்தி கோபி, இனியாவிடம் ஒருவேளை நானும் அம்மாவும் பிரிஞ்சிட்டா நீ யார் பக்கம் இருப்ப என கேட்டதும் இனியா ஷாக் ஆகிறார். அதை கண்ட கோபி பதறி சும்மா ஜோக் என சொல்ல இனியா சிரித்துக்கொண்டே கண்டிப்பா உங்க பக்கம் தான் அப்பா இருப்பேன், அம்மா போர் என இனியா கூறுகிறார். இதை கேட்டதும் ‘சின்ராச கைலயே பிடிக்க முடில’ என்ற வகையில் கோபிக்கு ஒரே சந்தோசம்.
இந்த பக்கம் அமிர்தாவின் அப்பா ரவுடிகள் செய்த காரியத்தால் ஊரை விட்டு போகலாம் என்று சொல்கிறார். அப்போது எழில் போன் பண்ண, அவனிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறாள் அமிர்தா. ஆனாலும் தனது காதலியின் குரலில் ஒரு தடுமாற்றத்தை உணர்ந்த எழில் உடனே அவளை காண வீட்டுக்கு செல்கிறான். எழிலை கண்டு அமிர்தாவின் அம்மா உடனே அவனிடம் அழுதுகொண்டு நடந்த அனைத்தையும் சொல்கிறார். கோபமடைந்த எழில் அமிர்தாவை பார்த்து ஏன் என்கிட்ட சொல்லல. அவனை சும்மா விடக்கூடாது என சொல்லி அமிர்தாவை கூட்டிக் கொண்டு கிளம்புகிறான். சண்டை எல்லாம் வேண்டாம் என வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பினார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.