பிறந்தநாளில் கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா? “மகா சங்கமம்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்களுடன் இணைந்து மகா சங்கமம் நடைபெறுகிறது. அதில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகா வர அங்கே அவர் கோபியை பார்த்து விடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மகா சங்கமம்:
மகா சங்கமம் சீரியலில் தாத்தாவின் 75வது பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் குன்னக்குடியில் இருந்து சென்னைக்கு வந்திருக்கின்றனர். தாத்தாவின் பிறந்தநாளை நல்லபடியாக கொண்டாட வேண்டும் என்ற ஈஸ்வரியின் ஆசையால் வீடு முழுவதும் அலங்காரம் செய்தும், பெண்களுக்கு ஒரே மாதிரி புடவையும், ஆண்களுக்கு ஒரே மாதிரி சட்டையும் பாக்கியா எடுத்து கொடுக்கிறார். மேலும் கோபி பேச்சை கேட்காமல் பாக்கியா ராதிகாவை பிறந்தநாளுக்கு அழைத்து இருக்கிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
பிறந்தநாள் அன்று கோபி வீட்டில் இருக்காமல், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைக்க ஆனால் ஈஸ்வரி கோவப்பட கோபி பிறந்தநாளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் வீட்டில் மாட்டி இருந்த புகைப்படங்களை மறைக்க கோபி திட்டமிட அவருடைய நடவடிக்கைகளை பார்த்து மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. அதன் பின் தாத்தாவிற்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அப்போது ராதிகா என்ட்ரி கொடுக்க கோபி எப்படி தப்பிக்கிறார் என்பது எல்லாம் ப்ரோமோவில் காட்டப்பட்டது.
Exams Daily Mobile App Download
பின் ராமமூர்த்தி கோபி பற்றி ராதிகாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைத்து கோபியை ரூமில் இருந்து வெளியே வர சொல்கிறார். ஆனால் கோபி வருவதாக இல்லை. அதனை தொடர்நது கோபி மாட்டிக் கொள்வாரா என்பது எல்லாம் இன்றைய எபிசோடில் காட்டப்படும். மேலும் கோபி மறைத்து வைத்த புகைப்படத்தில் கோபியின் முகம் தெரிய அதை ராதிகா பார்த்து விடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும். மேலும் கோபியின் உண்மையான முகம் தெரிந்த பின் ராதிகா எப்படி நடந்து கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.