Vijay TV Bigg Boss 5 Promo | முதல் இடத்திற்கு சண்டையிடும் சிபி & நிரூப்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க் ஆக போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் சிபி மற்றும் நிரூப் இடையில் கடும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இறுதிக்கட்டம்:
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 4 சீசன்களை கடந்து 5வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த 5வது சீசனில் யாரும் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்துள்ளது. இதுவரை கமலை தவிர யாரும் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியில், ஒரு எதிர்பாராத நிகழ்வினால் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தார். அதன் பின்னர், முன்னதாக போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று நினைத்த போட்டியாளர்கள் இன்னும் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். ஆனால் இறுதி வரை இருக்க தகுதியானவர்கள் என்று நினைத்த பல போட்டியாளர்கள் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியுள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் – பொங்கல் பரிசு! அதிகாரிகள் தகவல்!
இந்நிலையில், நேற்றைய வார இறுதி நிகழ்ச்சியில் கமல் மிகவும் முக்கியமான, பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ச்சையை கிளப்பி வந்த, மக்கள் மத்தியில் கவனம் பெற்ற ஒரு பாவனி மற்றும் அபிநய் பிரச்சனை பற்றி பேசி அதற்கு ஒரு குறும்படத்தையும் வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இமான் அண்ணாச்சி வெளியேறியுள்ளார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர். இமான் அவர்கள் அவ்வப்போது சில சண்டைகளில் கலந்து கொண்டாலும், பலரின் அபிமானத்தையும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி! மாணவர்கள் எதிர்பார்ப்பு!
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் குரலில் வரும் அறிவுறுத்தல் வருகிறது. நிகழ்ச்சியில் இறுதி கட்ட ரேஸ் ஆரம்பித்து விட்டதாகவும், இந்த பட்டியலில் தங்களை போட்டியாளர்கள் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் போட்டியாளர்கள் தங்களுக்கு தகுதியான இடம் என்று நினைக்கும் இடங்களில் நிற்க ஆரம்பிக்கின்றனர். அதில், அபிநய் 4ம் கட்டத்திலும், ராஜு 3ம் கட்டத்திலும், பிரியங்கா 2ம் கட்டத்திலும் நிற்கின்றனர். ஆனால் முதல் இடத்தில் சிபி நிற்கிறார். அதற்கு நிரூப் நீ அந்த இடத்திற்கு தகுதி இல்லை என்றும், தான் தான் தகுதியானவர் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.