அசிமிற்கு ADK மீது Personal பகை.. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஏடாகூடமான வழக்கு – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 45 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் அசிம் ADK பிரச்சனை பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சென்ற மாதம் பிரமாண்டமாய் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வாரந்தோறும் கடுமையான டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில், அதில் போட்டியாளர்கள் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். ஒரு வாரம் நண்பர்களாக இருப்பவர்கள் அடுத்த வாரம் சண்டையிட்டு கொள்கின்றனர். அதனால் இந்த சீசனில் அனைத்து போட்டியாளர்களும் தனித்து விளையாடுவது உறுதியாக தெரிகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி இருக்கிறது. அதில் வீட்டில் சென்ற வாரம் நடந்த சம்பவங்கள் குறித்து வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அசிம் ADK சண்டை குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அசிம் டாஸ்கில் வெற்றி பெற தான் சாவியை ஒளித்து வைத்ததாகவும், அது ADK மீது இருந்த பர்சனல் பகை இல்லை என வழக்கு தொடர்கிறார். அவருக்கு ஆதரவாக ஷிவின் வாதாடுகிறார்.
Exams Daily Mobile App Download
ADKக்கு ஆதரவாக விக்ரமன் வாதாடுகிறார். ஒருவர் காலில் கட்டப்பட்டு வலியில் இருக்கும் நேரத்தில் டாஸ்க் விளையாடுவது என்பது மனிதாபிமானம் இல்லாத செயல், ADK காலில் விழுகிறேன் சாவியை கொடுங்க என சொன்தை கேட்டும் நீங்க சாவியை மறைத்து வைத்தது, உங்களுக்கு ADK மீது இருந்த பர்சனல் பகை என்பதை தான் குறிக்கிறது என விக்ரமன் வாதாடுகிறார்.