மனைவி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதே ரச்சித்தாவின் கணவர் செய்த காரியம் – வைரல் பதிவு!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு பல புதுமையான டாஸ்க்குகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவரான ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் தன்னுடைய வாக்கை யாருக்கு அளித்துள்ளார் என்பது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பல மொழிகளில் மக்களின் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தமிழில் தொடங்கப்பட்டது. இதன் ஐந்து சீசன்களும் வெற்றி பெற்ற நிலையில் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற் போல டாஸ்குகளும் இந்த சீசனில் புதுமையாக வைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் நடிகை ரச்சித்தா மகாலக்ஷ்மி. தற்போது 15 போட்டியாளர்களில் ஒருவராகவும், கடினமான போட்டியாளர்களில் ஒருவராக விளையாடி வருகிறார். மேலும் ரச்சித்தாவின் கணவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
சன் டிவி “கயல்” சீரியலில் அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் – வெளியான படப்பிடிப்புத்தள புகைப்படம்!
Follow our Instagram for more Latest Updates
ரச்சித்தாவும் தினேஷ் அவர்களும் பிரிந்துவிட்டாலும், தன்னுடைய மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என அவர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் தன்னுடைய வாக்கை அவர் நிவாஷினிக்கு பதிவிட்டுள்ளார். மேலும் தான் நிவாஷினிக்கு ஆதரவு தெரிவித்ததாக இன்ஸ்டாவில் வாக்களித்த புகைப்படத்தையும் தினேஷ் பகிர்ந்து இருக்கிறார்.