Vijay TV BIGG BOSS வீட்டில் இருந்து 5 லட்சம் பணத்துடன் வெளியேறியது இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி Bigg Boss நிகழ்ச்சியில் 14வது வாரத்தில் அந்த 5 லட்சம் பணத்தை யார் எடுத்து கொண்டு சொல்லப்போகிறார் என ரசிகர்கள் அதிக அளவு எதிர்பார்ப்பில் உள்ளனர். இதன் விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
இவருக்கு தான் 5 லட்சம் பணமா?
தற்போது பெரியவர் முதல் சிறியவர் வரை அதிகமாக விரும்பப்படும் நிகழ்ச்சியாக VIJAY TV Bigg Boss உள்ளது. Bigg Boss நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய Bigg Boss நிகழ்ச்சி 2 மாதங்கள் கடந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் இருவரும் வைல்டு கார்டு என்ட்ரி குடுத்தார்கள். நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில தினங்களே இருப்பதால் ஒவ்வொரு போட்டியாளர்களும் பல்வேறு யுக்திகளை வகுத்து தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் கதிர் யார் தெரியுமா? நெகிழ வைக்கும் நிஜ வாழ்க்கை! ரசிகர்கள் ஷாக்!
தற்போது மக்களால் அதிகம் விரும்பப்படும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதுதான் ப்ரீஸ் டாஸ்க். தற்போது நிரூப், அக்சரா, சிபி, பிரியங்கா ,ராஜு,இந்த வாரம் தாமரை ஆகியோர்களின் குடுபத்தினர் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமீர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை பற்றி வீட்ற்குள் பேசியிருந்தார். அதில் அவருடைய அம்மா பற்றி பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சில நாட்களாக அமீர் பற்றிய பேச்சு சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாக இருந்து வருகிறது.
தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் முன்னணி நடிகை – வெளியான தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
அதையெடுத்து ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இந்த பணத்தை எடுத்து யார் வெளியில் செல்கிறீர்கள் என்று கேட்பது வழக்கம். அப்போது விருப்பம் உள்ளவர் 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு போட்டியில் இருந்து விலகி விடுவார்கள். அவர்கள் சீசனின் கேம் சேஞ்சர். கடந்த சீசனில் கேப்ரில்லா பணத்தை எடுத்து சென்றது போல் இந்த சீசனில் யார் செல்லப்போறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் அமீர் அந்த 5 லட்சத்தை எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ராஜு மற்றும் பிரியங்காவிற்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவருக்கு Tittle கிடைப்பது கடினம். எனவே அமீர் சிறப்பான முடிவை எடுத்துள்ளார் என்று சிலர் சமூகவலைத்தளத்தில் பாராட்டி வருகிறார்கள். ஆனால் அமீர் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஷாக்காக இருக்கும்.