Vijay TV Bigg Boss 5 | எலிமினேஷனில் இருந்து தப்பித்த நிரூப், இசைவாணி! ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தமிழில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பல போட்டியாளர்களும் புதிய முகங்களாக இருக்கின்றனர். அதே போல் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்கேற்று பிக் பாஸ் கூறும் டாஸ்குகளை முறையாக செய்ய வேண்டும். அதில் மக்களின் மனம் கவர்ந்தவர் இறுதி போட்டியில் வெற்றியாளராக கருதப்படுவார்.
‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீசன் 2 – அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
அந்த வகையில் தற்போது 1 மாதம் கடந்து உள்ள நிலையில் பலரின் உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்று நடிகர் கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் சற்று தாமதமாக தான் ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டது. அந்த வகையில் முதல் ப்ரோமோவில் கண்டிப்பாக இந்த முறை எலிமினேஷன் இருக்கும் என்று கூறியுள்ளார். அதே போல் இரெண்டாவது ப்ரோமோவில் தாமரைச்செல்வி மற்றும் பாவ்னி இருவரும் கமல் எதிரிலேயே சண்டையிட்டு கொள்கின்றனர்.
டிக்டாக் பிரபலம் சுகந்தி தேனியில் திடீர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை!
தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வீட்டில் 9 பேர் இந்த முறை நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யார் வெளியேற நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். முதலில் ப்ரியங்காவிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என்று கூறுகிறார். அதனை கேட்டு விட்டு அலறும் பிரியங்கா வேறு எதாவது பேசலாம் என்று கூறி நழுவ பார்க்கிறார். ஆனால், நடிகர் கமல் அவரை கூற சொல்லி வற்புறுத்துகிறார். பின்னர், சரி கடைசியாக நிருபிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என்று கேட்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.