பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க களமிறங்கிய புது கேரக்டர் – சீரியலில் அடுத்த திருப்பம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் உள்ள பாரதி கண்ணம்மா தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பொறுமையை இழக்க செய்தது மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க புது என்ட்ரி கொடுக்க ஒருவர் வரவிருக்கிறார்.
வரவிருக்கும் புது நபர்:
பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையிலும்,பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க குடும்பத்தில் புதிதாக ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சமீபத்தில் லக்ஷ்மிக்கு தனனுடைய அப்பா பாரதி என்று தெரிய வந்தது போல ஹேமாவுக்கும் தன்னுடைய அம்மா கண்ணம்மா தான் என தெரிய வந்தால் சூப்பரா இருக்கும் என்பது ரசிகர்களின் ஆசை. அவ்விதமாக இன்றைய எபிசோடில் ஹேமா, ஸ்கூல் டூர் பற்றி எழுதிய கட்டுரையில் சமையல் அம்மாவான கண்ணம்மாவை பற்றி எழுதியதை குறித்து ஹேமாவின் டீச்சர் கண்ண்மாவிடம் பேசியுள்ளார்.
கோபியுடன் பழகும் பெண்ணை கண்டுபிடித்த எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதை குறித்தும், கண்ணம்மாதான் தன்னுடைய நிஜ அம்மா என தெரியாமல் பாரதியை கல்யாணம் செய்துக் கொள்ளும்படி இவளிடம் ஹேமா கேட்டது பற்றியும் வாய்தா வடிவுக்கரசியிடம், கண்ணம்மா மனம் விட்டு சொல்கிறார். இதையெல்லாம் பாரதிக்கு தெரிய வந்தால் கண்டிப்பா என்ன மொத்தமா அடியோடு வெறுக்க ஆரம்பிச்சிடுவாறு என்று சொல்லி கவலைப்படுகிறார் கண்ணம்மா. அதே நேரம், வெண்பாவுக்கு ஒரு நம்பரில் இருந்து ஃபோன் வருகிறது. வழக்கத்தை விட வெண்பா அந்த நம்பரை பார்த்ததும் பயத்தில் அஞ்சி நடுங்குகிறார்.
அதை குறித்து சாந்தி என்ன என்று விசாரித்தும் வெண்பா பதில் சொல்லாமல் சாந்தியை திட்டி அனுப்புகிறார். இவ்வாறு சீரியலில் புதிதாக வருகை தரும் வேணுவின் கல்லூரி நண்பரான விஜய் யார்? அவர் எதற்காக வருகிறார்? அவர் எப்படி பாரதியையும்,கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பார்? யார் அந்த நபர்? என்ற கேள்விகளுக்கு மத்தியிலும் வெண்பாவுக்கு போன் செய்த அந்த நபர் யார்? அந்த நபருக்கு வெண்பா ஏன் அஞ்சுகிறார்? என்ற பல கேள்விகளுக்கு விடை கூடிய விரைவில் தெரிய வரும்.