விஜய் டிவியில் புதிய தொடரில் நடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!
பட வாய்ப்பின் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு பிள்ளை என்னும் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நம்ம வீட்டு பிள்ளை:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும், இந்த சீரியல்கள் அனைத்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் நிகழ்வுகளை படம் போட்டு காட்டி கொண்டிருக்கிறது. தற்போது நம்ம வீட்டு பிள்ளை என்கிற ஒரு புதிய நெடுந்தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பாரதி கண்ணம்மா தொடரில் முன்னாள் கண்ணம்மாவாக நடித்துக் கொண்டிருந்த ரோஷினி தான் நம்ம வீட்டு பிள்ளை தொடரிலும் நடிக்கவுள்ளார்.
எனக்கு மாடலான ஒரு அம்மா வேண்டும் – கோபியிடம் கேட்ட இனியா! பாக்கியலட்சுமியில் புதிய திருப்பம்!
ரோஷினிக்கு பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து கொண்டிருந்த போதே பல பட வாய்ப்புகள் வந்தபடியே இருந்தன. இதனால் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகினார். மீண்டும் பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்துகொள்ளுமாறு ரோஷினியை ரசிகர்கள் கேட்டு கொண்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது நம்ம வீட்டு பிள்ளை தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த சீரியலின் கதைக்களமும் கிட்டத்தட்ட பாரதி கண்ணம்மா தொடரின் கதைக்களம் போலவே தான். அதாவது ரோஷினி கருப்பாக இருப்பதால் பெற்றோர்கள் கூட இவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். அவ்வளவு பிரகாசத்தை கொடுக்கும் சூரியன் கூட இருளடைந்த வானத்தில் இருந்து தான் உதயமாகிறது. என்னை மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறேன் என வெறுத்து ஒதுக்குகிறார்கள் என கவலைப்படுகிறார். இதில் ரோஷினிக்கு ஜோடியாக ராஜா ராணி 2 தொடரில் நடித்து கொண்டிருக்கும் சித்து நடிக்கவுள்ளார்.