ரசிகர்கள் எதிர்பார்த்தது போல கண்ணம்மா காலிலேயே விழுந்த பாரதி.. நடக்க போவது என்ன?
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி DNA டெஸ்ட் மூலமாக கண்ணம்மா மீது தவறு இல்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டுள்ளார். மேலும் வெண்பா தான் குற்றவாளி என துர்கா சாட்சி சொல்ல, கண்ணம்மா காலில் விழுந்து பாரதி மன்னிப்பு கேட்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் விறுவிறுப்பாக கதைக்களம் சென்று இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்நிலையில் பாரதி தன் கையால் DNA டெஸ்டிற்கு ரத்த மாதிரிகளை கொடுத்து அதை அவரே சென்று வாங்கி, லட்சுமியும் ஹேமாவும் தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். பின் ஹேமா உயிரை காப்பாற்ற நான் தான் உன்னை பெற்ற அப்பா எனவும், கண்ணம்மா நான் தாலிகட்டிய மனைவி என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
உடனே பாரதியின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என கண்ணம்மா கேட்கிறார். அப்போது பாரதி நான் DNA டெஸ்ட் எடுத்ததாக சொல்ல, குறுக்கே வந்த வெண்பா உனக்கு குழந்தையே பிறக்காது. நீ 10 வருசத்துக்கு முன்னாடி டெஸ்ட் எடுத்தாய் அது எப்படி பொய்யாகும் என கேட்க, அப்போது துர்கா வந்து வெண்பா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என உண்மையை சொல்கிறார். இந்நிலையில் பாரதி வெண்பா மீது கோவப்பட, வெண்பா சிரித்து கொண்டே அங்கிருந்து கிளம்புகிறார்.
அப்போ இது நாடகம் இல்லை போல.. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!
Exams Daily Mobile App Download
அதன் பின் பாரதி கண்ணம்மா மீது இத்தனை ஆண்டுகளாக பழி போட்டதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது கண்ணம்மா காலில் விழுந்து இனிமேல் என் குழந்தைகள் லட்சுமி ஹேமாவுடன் நாம சந்தோசமாக வாழ்வோம், நீ என்னை மன்னித்து ஏற்றுக் கொள் என கெஞ்சுகிறார். சௌந்தர்யாவும் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள சொல்கிறார். இந்நிலையில் கண்ணம்மா எடுக்க போகும் முடிவு தான் கதையின் முடிவாக இருக்க போகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.