ஊரை விட்டு சென்ற கண்ணம்மா.. தேடி அலைந்து கண்டுபிடிக்கும் பாரதி – பரபரப்பு திருப்பங்களுடன்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி செய்த தவறை எல்லாம் உணர்ந்து கண்ணம்மாவுடன் வாழ வேண்டும் என நினைக்கும் சமயத்தில், கண்ணம்மா குழந்தைகளுடன் வெளி ஊருக்கு சென்று விடுகிறார். அவர்களை தேடி பாரதி வருவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என்ற உண்மை பாரதிக்கு தெரிய வந்துள்ளது. அவர் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, ஆனால் கண்ணம்மா அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் கண்ணம்மாவுடன் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என பாரதி நினைக்க, ஆனால் கண்ணம்மா குழந்தைகளுடன் ஊரை விட்டு சென்றுவிடுகிறார். அவர் தன்னுடைய அப்பாவின் சொந்த கிராமத்திற்கு குழந்தைகளுடன் சென்றுவிடுகிறார்.
சீரியலில் மட்டுமல்ல.. நிஜத்திலும் ப்ரைம் டைம் நடிகைக்கு திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கண்ணம்மா மற்றும் குழந்தைகளை தேடி பாரதி வருகிறார். அவருக்கு உதவியாக கண்ணம்மாவின் தாய் மாமா இருக்கிறார். பாரதி புகைப்படத்தை காட்டி இவர்களை பார்த்து இருக்கீங்களா என கேட்க, யாரும் பார்க்கவில்லை என சொல்கின்றனர். அப்போது பாரதியின் நம்பருக்கு ஒரு லொகேஷன் வருகிறது. ஒருவேளை ஹேமா அனுப்பி இருப்பாளோ என பாரதி சந்தேகப்பட, கண்ணம்மா அங்கே தான் இருப்பாரோ என கண்ணம்மாவின் தாய் மாமா சொல்கிறார். கண்ணம்மா இருக்கும் இடம் தெரிந்த சந்தோஷத்தில் பாரதி அவர்களை தேடி செல்வது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.