நான் தான் சார் DNA ரிப்போர்ட்ட மாத்துனேன்.. ஆண்டுகள் கழித்து பாரதி தலையில் இடியை போட்ட வார்டு பாய்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது பல திருப்பங்கள் வர இருக்கிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு பின் புது நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் பல மாதங்களாக முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் 2 ஆண்டுகளுக்கு முன் பெரிய திருப்பம் ஒன்று அரங்கேறி பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்தனர். பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள் என்பதே சீரியலின் பெரிய ட்விஸ்ட்டாக இருந்து வந்தது. அந்த வகையில் தற்போது பாரதி மீண்டும் DNA டெஸ்ட் எடுக்க இருக்கிறார். அதனால் உண்மை எல்லாம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் அதில் பெரிய திருப்பமாக 2 ஆண்டுகளுக்கு பின் முக்கிய கதாபாத்திரம் ஒன்று ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் தான் பாரதியின் DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்தவர். செல்வராஜ் கதாபாத்திரத்தில் அவர் டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றியதால் தான் கதையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. தற்போது செல்வராஜ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரேயந்த் குமார் மீண்டும் பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக உண்மை எல்லாம் வெளியே தெரிய வருமா என்பது எல்லாம் கதையின் ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி – சக நடிகர்கள் வாழ்த்து!
Exams Daily Mobile App Download
இனி வரும் எபிசோடில் இது குறித்து காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் உண்மையை சொல்ல, அதனால் பாரதி மனம் திருந்தி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் பாரதி கண்ணம்மா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியாக இருக்கும். இதன் மூலம் இனி வரும் எபிசோடுகள் பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.