இரு குழந்தைகளும் என் புள்ளையா.. ஷாக்கில் பாரதி.. வெளியான DNA டெஸ்ட் முடிவு – அனல் பறக்கும் “பாரதி கண்ணம்மா”!

0
இரு குழந்தைகளும் என் புள்ளையா.. ஷாக்கில் பாரதி.. வெளியான DNA டெஸ்ட் முடிவு - அனல் பறக்கும்
இரு குழந்தைகளும் என் புள்ளையா.. ஷாக்கில் பாரதி.. வெளியான DNA டெஸ்ட் முடிவு - அனல் பறக்கும் "பாரதி கண்ணம்மா"!
இரு குழந்தைகளும் என் புள்ளையா.. ஷாக்கில் பாரதி.. வெளியான DNA டெஸ்ட் முடிவு – அனல் பறக்கும் “பாரதி கண்ணம்மா”!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி DNA டெஸ்ட் எடுக்க கொடுத்திருக்கும் நிலையில், அதற்கு முன்னால் வெண்பாவை திருமணம் செய்ய முன்வந்து பல திருப்பங்கள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் DNA டெஸ்ட் முடிவுகள் வந்து தற்போது பாரதியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது பாரதி ஒரு மனதாக DNA டெஸ்ட் எடுக்க முடிவு செய்துள்ளார். மறுபக்கம் வெண்பா தன்னை யாரோ கற்பழித்துவிட்டார்கள் என சொல்லி பாரதியை திருமணம் செய்ய நினைக்கிறார். பாரதியும் வேறு வழியில்லாமல் வெண்பா வற்புறுத்தலை ஏற்று திருமணத்திற்கு தயாராகிவிடுகிறார்.

Exams Daily Mobile App Download

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, பாரதி கொடுத்த DNA டெஸ்ட் முடிவுகள் இன்னும் வராமல் இருக்கிறது. அந்த முடிவுகளை பார்த்துவிட்டு வெண்பாவை கல்யாணம் செய்யலாம் என பாரதி முடிவோடு இருக்க, ஆனால் வெண்பா வற்புறுத்தி தாலி கட்ட சொல்கிறார். இந்நிலையில் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு கண்ணம்மா, சௌந்தர்யா குடும்பத்துடன் வந்து பாரதி வெண்பா திருமணத்தை நிறுத்துகின்றனர். வெண்பா செய்த தவறை அனைவரும் புரிய வைக்க அதனால் பாரதி மிகவும் வருத்தப்படுகிறார்.

மீண்டும் பழைய கெத்துடன் TRP-யில் மாஸ் காட்டிய “பாரதி கண்ணம்மா” சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

Follow our Instagram for more Latest Updates

அப்போது ஹேமா வந்து வெண்பாவை திருமணம் செய்ய இருப்பதை தெரிந்து கோவித்துக் கொண்டு செல்ல, குடும்பம், மனைவி, குழந்தைகள் என எல்லாரும் பாரதியை விட்டு செல்கின்றனர். நிர்கதியாக நிற்கும் பாரதிக்கு போன் வருகிறது. அதில் அந்த இரு குழந்தைகளும் பாரதியின் குழந்தைகள் தான் என்ற உண்மையை டாக்டர் சொல்கிறார். அதை தெரிந்து கொண்டு பாரதி மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். இனி அவர் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பாரா? கண்ணம்மா அவர்களை ஏற்றுக் கொள்வாரா என்பது எல்லாம் கதையின் கிளைமேக்ஸ் காட்சியாக வர இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!