குற்றஉணர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளும் இனியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரும் எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் தன்னுடைய அம்மா பற்றியே கதையுடன் படம் எடுத்து இருக்கிறார். அதை பார்த்த இனியாவிற்கு அம்மாவை நாம கஷ்டப்படுத்தி இருக்கோம் என நினைத்து தற்கொலை முயற்சி செய்கிறார். அதெல்லாம் அடுத்து வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி பாக்கியாவிற்கு நல்ல கணவனாக இல்லாமல் இருக்கிறார். பல இடங்களில் கோபி கதாபாத்திரம் நல்ல அப்பாவாக காட்டப்பட்டாலும் நல்ல அப்பா தன்னை பற்றி நினைக்காமல் குடும்பத்தை பற்றியே நினைக்க வேண்டும் என்பதால் ரசிகர்கள் பலர் கோபி கதாபாத்திரம் மீது கோவத்தில் இருக்கின்றனர். அப்பாவி மனைவியாக பாக்கியாவை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சீரியலில் இன்றைய எபிசோடில் எழிலின் பட வேலைகள் முடிந்து திரையரங்கில் படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்காக பாக்கியா மற்றும் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தியேட்டர் போக கோபியை அவர் வர வேண்டாம் என சொல்கிறார். அதனால் கோபி ராதிகாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். என்னுடைய மகனின் முன்னேற்றத்தில் நான் இல்லை என்பதால் வருத்தமாக இருப்பதாக கோபி சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய விஜே தீபிகாவிற்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!
எழில் தன்னுடைய படத்தில் அம்மா எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது பற்றியும், அம்மாவை எப்படி எல்லாம் உதாசீனப்படுத்தி இருக்கின்றனர் என்பது பற்றியும் காட்டப்படுகிறது. அதை பார்த்து பாக்கியா பெருமைப்படுகிறார். குடும்பத்தில் அனைவரும் எழிலின் பாசத்தை பார்த்து சந்தோஷத்தில் இருக்க அம்மாவை இந்த அளவிற்கு வருத்தப்பட செய்திருக்கோமா என இனியா நினைத்து வருத்தப்படுகிறார். குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொள்ள போகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.