‘பாக்கியலட்சுமி’ கில்லாடி கோபி சீரியலுக்கு வந்த காரணம் – அவரை பற்றி ரசிகர்கள் அறியாத தகவல்கள்!
அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பல கில்லாடி வேலைகளை செய்து இந்நாள் வரை பாக்கியாவிடம் சிக்காமல் தப்பித்து வரும் கோபியை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் அவர் யார்? அவர் எப்படி சினிமா துறைக்குள் நுழைந்தார்? என்ற பல தகவல்களை பார்ப்போம்.
பாக்கியலட்சுமி :
பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரம் பாக்கியா என்பது மாறி தற்போது முக்கியமாக கோபி கதாபாத்திரமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. பாக்கியாவின் கணவர் கோபியாக சதீஷ் நடித்து வருகிறார். மனைவிக்கு தெரியாமல் ராதிகா என்ற இன்னொரு பெண்ணுடன் பழகுவது அதை வீட்டிற்கு தெரியாமல் ஏமாற்றுவது என வில்லத்தன நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்காகவே இவரை பாக்கியலட்சுமி ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர். இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆகியுள்ளார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிரின் முல்லையாக இனி புது நடிகை – ஷாக்கான ரசிகர்கள்!
இவர் சென்னையில் பிறந்து 1990ல் அவரது சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் நடித்த முதல் படம் மின்சார பூவே அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இயக்குனர் பாலா கிருஷ்ணன் படமான MGR படத்தில் எம்.ஜி.ஆர். ஆக நடித்த இந்த படம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதிலிருந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் முதன்முதலில் சன்டிவியில் ஒளிபரப்பான மந்திர வாசல் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர்.
2வது குழந்தைக்காக ஆல்யா சஞ்சீவ் செய்த காரியம் – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
அதன் பிறகு திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ரங்க விலாஸ், குலதெய்வம் போன்ற பல சீரியலில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் ஒன்றுதான் தற்போது நடிக்கும் பாக்கியலட்சுமி சீரியலும். இவ்வாறு விஜய் டிவியில் நுழைந்த பிறகும் வெள்ளித்திரையில் தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் தனது நடிப்பை தாண்டி பாடல் பாடுவதிலும், நடனம் ஆடுவதிலும் ஆர்வம் மிகுந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் பட வாய்ப்புகள் வந்தாலும் சிறிதும் யோசிக்காமல் ஓகே சொல்லி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.