எழில் படத்திற்கு வராத கோபி, கேள்வி கேட்ட ஈஸ்வரி, கோவத்தில் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் நாளைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் படத்தை பார்க்க கோபி வராமல் இருப்பதால் குடும்பமே வருத்தத்தில் இருக்கிறது. இந்நிலையில் கோபி ஏன் வரவில்லை என ஈஸ்வரி கோவமாக கேட்க கோபி எழில் வர வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். பின் பாக்கியா எழில் மீது கோவமாக இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இன்றைய எபிசோடில் எழிலின் படம் வெளியாகியதை அடுத்து பாக்கியா மற்றும் குடும்பத்தில் அனைவரும் தியேட்டருக்கு செல்கின்றனர். அப்போது பாக்கியா ஈஸ்வரி கோபி வரவில்லை என வருத்தமாக இருக்கின்றனர். அப்போது எழில் படத்தை பார்த்து சந்தோசமாக இருக்க பலர் அவரை பாராட்டுகின்றனர். மேலும் எழில் பெயர் பெரிய திரையில் வந்ததை பார்த்து பாக்கியாவிற்கு ஆனந்த கண்ணீர் வருகிறது.
இந்நிலையில் கோபி வராமல் இருக்கும் நிலையில் மறுநாள் ஈஸ்வரி கோபி வேலை விட்டு வந்ததும் அவரிடம் கேள்வி கேட்கிறார். எழிலிற்கு எவ்வளவு முக்கியமான விஷயம் நடந்திருக்கு ஏன் வரவில்லை என கேட்க அப்போது கோபி நானும் எழில் படம் எடுத்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டேன் ஆனால் எழில் என்னிடம் வந்து நீங்க படம் பார்க்க வரவே வேண்டாம் என சொல்லிவிட்டான் அப்பறம் எப்படி வருவேன் என கேட்கிறார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வீட்டில் மாட்டிய சந்தியா, சரவணன்!
அதை கேட்டு ஈஸ்வரியும் பாக்கியாவும் அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா அப்பாவிடம் ஏற்கனவே சொல்லி வர சொல்லு என சொல்லிவிட்டும் எழில் இப்படி நடந்து கொண்டதால் அவன் மீது கோவமாக இருக்கிறார். எழில் அம்மாவிடம் வந்து மன்னிப்பு கேட்க ஆனால் பாக்கியா நான் சொல்லியும் நீ இப்படி செய்து இருக்கிறாய் என சொல்லி கோவமாக பேசுகிறார். எழிலிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.