கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறிய நபர் – நம்ப மறுத்த பாக்கியா!
கோபி அடிக்கடி ராதிகாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை ஒருவர் நோட்டமிடுகிறார். பாக்கியா ஏமாந்து கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாக்கியாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறுகிறார். இருப்பினும் பாக்கியா அதனை நம்ப மறுக்கிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்துமே டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. ஒவ்வொரு நாளும் கோபி எப்போது மாட்டிக்கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. அதாவது கோபியின் நடத்தையை ராதிகாவின் வீட்டின் பக்கத்தில் வசித்து கொண்டிருப்பவர்கள் இத்தனை நாட்களாக கவனித்திருக்கிறார்கள். பாக்கியாவின் கணவர் கோபி தான் ராதிகாவை திருமணம் செய்ய போகிறார் என்பதை புரிந்துகொண்டனர்.
பாக்கியா ஏமாந்து கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரே பாக்கியாவின் வீட்டிற்கு தேடி வருகிறார். உங்களிடம் ஒரு விஷயம் கூற வேண்டும் என கூறுகிறார். உங்களை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை. நீங்கள் என்னிடம் என்ன சொல்ல வேண்டும் என அதட்டி பேசுகிறார். இருந்தாலும் பாக்கியாவிடம் உண்மையை கூறிவிட வேண்டும் என நினைத்து மேலும் மேலும் விடாமல் பேசுகிறார். உங்கள் கணவர் உங்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். உங்களுக்கே தெரியாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டார் என கூறுகிறார்.
இவ்வளவு கூறியும் பாக்கியா இதனை நம்பவே இல்லை. 25 வருடங்களாக நான் அவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். அவரை பற்றி எனக்கு தெரியும் என கூறுகிறார். தேவையில்லாமல் எனது கணவரை பற்றி தவறாக கூற வேண்டாம் என கூறுகிறார். உண்மைகள் அனைத்தையும் கூறிய பின்பு கூட பாக்கியாவிற்கு துளி கூட சந்தேகம் வரவே இல்லை. என்ன இருந்தாலும் ஒரு பெண் இவ்வளவு அப்பாவியாக இருக்க கூடாது என ரசிகர்களும் கடுப்பாகியுள்ளனர். கண்ணுக்கு முன்னால் கோபி ராதிகாவை திருமணம் செய்தால் கூட பாக்கியா நம்பமாட்டார் போல.