தனது தோழி பாக்கியாவிற்கு எதிரியாக மாறப்போகும் ராதிகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் கோபி ஏற்பாடு செய்துள்ள பார்ட்டி ஒன்றில் பாக்யாவும் கலந்துகொண்டு அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள போகிறார். இதற்கு பிறகு பாக்யாவிற்கு வில்லியாக ராதிகா மாறவுள்ளார்.
பாக்யலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பாக்யாவிற்கு தெரியாமலேயே கோபி பாக்யாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அந்த பத்திரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைது விட்டார். தற்போது பாக்யா மற்றும் கோபி இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் இருந்து பாக்யா வீட்டிற்கு நோட்டீஸ் வந்துள்ளது. பாக்யா நீதிமன்றத்திற்கு வந்தால் கண்டிப்பாக இதுவரை மறைத்து வந்த அனைத்து விஷயங்களும் பாக்யாவிற்கு தெரிந்துவிடும்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை தழுவும் கோபியின் அப்பா – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருகிறார். ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பாக ராதிகாவை தனது நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவைக்க பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அந்த பார்ட்டிக்கு பாக்யாவையும் அழைக்கலாம் என ராதிகா யோசித்து கொண்டிருக்கிறார். பாக்யாவை இந்த பார்ட்டிக்கு அழைக்கட்டுமா என ராதிகா கோபியிடம் கேட்கிறார். கோபி கண்டிப்பாக பாக்யாவை அழைக்க ஒப்புக்கொள்ளமாட்டார் என எதிர்பார்த்த சமயத்தில் கோபி பாக்யாவை அழைக்க ஒப்புக்கொண்டார்.
மணிமேகலையை ஏமாற்றிய ஷிவாங்கி – ‘குக் வித் கோமாளி’ கோமாளிகளின் வைரல் வீடியோ!
பாக்யா இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் கோபியின் உண்மை முகம் முழுவதும் பாக்யாவிற்கு தெரிந்துவிடும். கோபி, பாக்யாவின் கணவர் என்று தெரிந்துகொண்ட பின்பும் ராதிகா கோபியை இரண்டாம் திருமணம் செய்வதில் தெளிவாக இருப்பதாக கதைக்களம் அப்படியே மாறவுள்ளது. இதனால் ராதிகா தனது நெருங்கிய தோழியான பாக்யாவிற்கே வில்லியாக மாறவுள்ளார். நாளுக்கு நாள் இந்த சீரியல் வேறுவிதமான பாதையில் பயணம் செய்து வருவதால் ரசிகர்களும் கடுப்பாகியுள்ளனர்.