விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சூட்டிங்கில் தூங்கும் இனியா – எழில் பதிவிட்ட போட்டோ!
இல்லத்தரசிகளின் கதையான “பாக்கியலட்சுமி” சீரியலில் விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால், நேஹா மேனன் உடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான பாக்கியாவின் வாழ்க்கையை பற்றிய கதையை மையமாக கொண்டு இருக்கிறது. படிக்காத பெண்ணாக பாக்கியா இருந்தாலும் குடும்பத்தை பார்த்துக் கொள்வதிலும் சரி, வாழ்க்கையில் வெற்றி பெறுவதிலும் சரி நல்ல முடிவுகளை எடுத்து சரியாக சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அவரை புரிந்து கொள்ளாத அவரது கணவர் கோபி அவருடைய கல்லூரி காதலி ராதிகா உடன் பழகி வருகிறார்.
ஆணவ பேச்சால் தள்ளிப்போன ரிலீஸ் – ‘என்ன சொல்லப் போகிறாய்’ அஸ்வின் உருக்கமான பதிவு!
ராதிகா கணவனை பிரிந்து இருப்பதால் அவருக்கு கோபி காட்டும் பாசம் ஆதரவாக இருக்கிறது. இந்த விஷயம் கோபியின் தந்தை ராமமூர்த்திக்கு தெரிய, அவர் கோபியை கண்டிக்கிறார். ஆனால் கோபி கேட்காமல் மீண்டும் மீண்டும் பழக அவர் ராதிகா அம்மாவிடம் சென்று சண்டையிடுகிறார். மேலும் இனிமேல் ராதிகா வீட்டிற்கு போக மாட்டேன் என சத்தியம் வாங்குகிறார். அதனால் கோபி வருத்தமாக இருக்க மறுபக்கம் எழில் அமிர்தாவிற்கு இரண்டாவது வாழ்க்கை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அமிர்தா அது பிடிக்காமல் அவரை வெறுக்கிறார்.
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்! ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியா தனியாக சுய தொழில் செய்ய அது நன்றாக சென்று தற்போது தனியாக அலுவலகம் வைக்கும் அளவிற்கு சென்றுள்ளது. மேலும் அவரை பத்திரிகையில் பேட்டி எடுக்கும் அளவிற்கு புகழடைந்து இருக்கிறார். அவருக்கு வெற்றி மீது வெற்றி வந்தாலும் வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில், பாக்கியாவின் கடைசி மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா படப்பிடிப்பு இடையில் தூங்கும் போது அதை புகைப்படம் எடுத்து எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.