கோபியை திட்டி தீர்த்த செழியன் – சமாளிக்க முடியாமல் கதிகலங்கிய கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

0
கோபியை திட்டி தீர்த்த செழியன் - சமாளிக்க முடியாமல் கதிகலங்கிய கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை திட்டி தீர்த்த செழியன் – சமாளிக்க முடியாமல் கதிகலங்கிய கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியாவை போலீசார் கைது செய்த போது கூட கோபி பாக்கியாவிற்கு துணையாக நிற்கவில்லை என்பதால் செழியன் கடுப்பாகி கோபியை கண்டவாறு திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குடும்பமே தனக்கு எதிர்மறையாக இருப்பதால் கோபி குழம்பியுள்ளார்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட 100 க்கும் மேற்பட்ட குழந்தைகளுமே மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாக்கியா தான் உணவில் ஏதோ கலந்துவிட்டார் என நினைத்து பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கூட்டி செல்கின்றனர். ஆர்டர் கொடுத்ததிற்காக ராதிகாவையும் விசாரிக்க வேண்டும் என்பதால் ராதிகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாக்கியாவின் நிலைமையை பார்த்து உடல்நிலை சரியில்லாமல் போன தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியாவும், ராதிகாவும் ஒரே காவல் நிலையத்தில் கைதாகி இருக்கும் விஷயம் கோபிக்கு தெரியவருகிறது. இப்போது மட்டும் காவல் நிலையத்திற்கு சென்றால் அனைவருக்குமே உண்மை தெரிந்து நடு ரோட்டில் தான் நிற்க வேண்டும் என நினைத்து கோபி வீட்டிலேயே அமைதியாக இருக்கிறார். பாக்கியாவை எப்படியாவது காவல் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ஆனால், கோபி எவரின் காலையும் அட்டென்ட் செய்யவில்லை. இதனால் குடும்பமே கோபி மீது கொலை வெறியில் இருக்கிறது.

ஸ்ருதி சொன்ன பொய்யால் சத்யா எடுத்த அதிரடி முடிவு – “மௌன ராகம் 2” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

ராதிகாவை மட்டும் கோபி மறைமுகமாக காவல் நிலையத்தில் இருந்து காப்பாற்றி கூட்டி வருகிறார். பின்பு, எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை போலீசாரிடமும் நிரூபித்து பாக்கியாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின்பு, எதுவுமே நடக்காதது போல கோபி வீட்டிற்கு வருகிறார். எப்போதும் கோபிக்கு மட்டுமே ஆதரவாக இருந்து வரும் செழியன் தற்போது முதன்முறையாக கோபியிடம் சண்டை போடுகிறார். அதாவது அம்மா இவ்வளவு கஷ்டத்தில் இருந்த போது கூட நீங்கள் அம்மாவிற்கு உதவியாக இல்லை எனக் கூறி கோபியை செழியன் கண்டபடி பேசும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!