கோபியுடன் செல்ல முடிவெடுத்த இனியா.. வெறுப்பை காட்டும் ராதிகா – “பாக்கியலட்சுமி” அடுத்து வரும் எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. இனியாவிற்கு ஸ்கூலில் பிரச்சனை வர கோபி அவருக்கு உதவி செய்கிறார். அதனால் பாக்கியா சத்தம் போட இனியா பெரிய முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் தான் டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் தான் ட்விஸ்ட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது பாக்கியாவும், கோபியும் பிரிந்து இருக்கும் நிலையில் இருவரும் தங்களுடைய வாழ்க்கையை பார்க்க தொடங்கி இருக்கின்றனர். ஆனால் கோபிக்கு ராதிகா சமைத்து போடாமல் கஷ்டப்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியாவின் அருமை தெரிய வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தற்போது செழியன் அப்பா ஆக இருப்பது குறித்து கோபி சந்தோசமாக இருக்கிறார். அடிக்கடி செழியனிடம் வந்து பேச செழியனும் எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். அந்த வகையில் இனியாவிற்கு ஸ்கூலில் பிரச்சனை ஒன்று வருகிறது. இனியாவின் தோழி போனை ஸ்கூலிற்கு எடுத்து கொண்டு வர அவரால் இனியாவும் மாட்டிக் கொள்கிறாள். அதனால் பெற்றோர்களை அழைத்து வர சொல்ல, இனியா வீட்டில் எப்படி சொல்வது என தெரியாமல் இருக்கிறார்.
பிரபல விஜய் டிவி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர் தான்!!
Exams Daily Mobile App Download
அதனால் இனி வரும் எபிசோடில் கோபிக்கு போன் செய்து உதவி கேட்கிறாள். கோபியும் இனியாவிற்காக ஸ்கூலுக்கு வர அது பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. அதனால் பாக்கியா சத்தம் போட ஈஸ்வரி உனக்கு அவன் தான் முக்கியம் என்றால் நீ அவனுடன் போ என சொல்கிறார். உடனே இனியா கோவமாக பேச ஈஸ்வரி இனியாவை அடிக்க வருகிறார். அப்போது கோபி வர இனியா கோபியிடம் எல்லாரும் அடிப்பதாக சொல்கிறார். உடனே கோபி இனியா விருப்பப்பட்டால் நான் அவளை கூட்டி செல்வேன் என சொல்கிறார். அடுத்து வர போகும் எபிசோடுகளில் இனியாவை ராதிகா வீட்டிற்கு கோபி அழைத்து செல்ல போகிறார். ஆனால் ஏற்கனவே மயூவை இனியா தள்ளிவிட்டதால் ராதிகா இனியா மீது கோவமாக இருக்கிறார். அவர் இனியா மீது பயங்கர வெறுப்பை காட்ட, இனியாவிற்கும் அம்மாவின் அருமை தெரிய வர இருக்கிறது.