கோபியுடன் வாழ மாட்டேன் சொன்ன பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி எல்லா பக்கமும் பாக்கியாவை ஏமாற்றி வரும் நிலையில் கோபியை பாக்கியா கண்மூடித்தனமாக நம்புகிறார். அதனால் கோபி செய்யும் வேலைகள் எல்லாம் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் கோபியை பற்றிய உண்மை தெரிய வர பாக்கியா எடுக்கும் அதிரடி முடிவு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவின் குடும்ப கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மாமியார் மருமகள் அம்மா மகன் செண்டிமெண்ட் என எல்லா கதையும் இருப்பதால் இந்த சீரியலை அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் கோபியின் நடவடிக்கைகள் எல்லாம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. அவர் பாக்கியாவை மட்டுமல்லாமல் குடும்பத்தையே ஏமாற்றி வருகிறார். இந்த உண்மை எல்லாம் எழில் மற்றும் ராமமூர்த்திக்கு தெரிந்தும் கூட கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கதிர் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!
மறுபக்கம் எழில் அமிர்தா காதல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பாக்கியாவை விவாகரத்து செய்ய கோபி முடிவு செய்துவிட்டார். இன்று இனியாவிடம் அது பற்றி பேச இனியா அவர் விளையாட்டுக்கு சொல்வது போல நினைத்திருக்கிறார். இந்நிலையில் கோபி மீது அன்பும் பாசமும் வைத்திருக்கும் பாக்கியா தற்போது கோபி மீது கண்மூடித்தனமான மரியாதை வைத்திருக்கிறார். ஆனால் கோபியோ அப்படி இல்லை. கோபியின் உண்மையான முகம் தெரிந்த பின்னர் பாக்கியா கோபிக்கு மரியாதை கொடுப்பாரா என்பது சந்தேகம் தான்.
கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறிய நபர் – நம்ப மறுத்த பாக்கியா!
இருந்தாலும், கோபி பற்றிய உண்மையான முகம் தெரிந்த பின்னர் பாக்கியா அவருடன் சேர்ந்து வாழ மாட்டார். மேலும் தனது குடும்பத்திற்கு கோபி முக்கியம் என்பதால் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பது எல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்படும். அதனால் கோபி பற்றிய உண்மை எல்லாம் தெரிய வர வேண்டும் என ரசிகர்கள் பலர் எதிர்பாத்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரம் மாட்டும் எபிசோடுகள் வந்தால் தான் TRPயில் மாபெரும் மாற்றம் வரும்.