பாக்கியாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ராதிகா.. வெல்லப்போவது யார்? – பாக்கியலட்சுமி அடுத்தகட்டம்!
பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி தாத்தா தான் தற்போது கதையை நகர்த்தி வருகிறார். அவர் செய்யும் அடுத்தடுத்த சர்பிரைஸ் விஷயங்கள் மூலம் கதை விறுவிறுப்பாக செல்ல இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
இந்த வருட குடியிருப்பு நலசங்கத்தில் தலைவராக பாக்கியா தான் தேர்தலில் நிற்க போகிறார் என்று ராமமூர்த்தி தாத்தா மற்றும் செல்வி இருவரும் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றனர். பாக்கியா இது வேண்டாம் என்று சொல்லுவதை ராமமூர்த்தி மற்றும் செல்வி இருவரும் கேட்க மறுக்கின்றனர். மேலும், மொத்த பெண்களும் சேர்ந்து பாக்கியாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த விஷயம் பற்றி கோபிக்கு தெரியவர, அவர் பாக்கியாவை கிண்டல் செய்து சிரிக்கிறார். ஆனால் ராமமூர்த்தி தாத்தா கோபிக்கு புதிய டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். பாக்கியாவை பார்த்து சிரிக்கிறீயே, உன்னால் பாக்கியாவை எதிர்த்து தேர்தலில் நின்று ஜெயிக்க முடியுமா? என்று கேட்கிறார். உடனே கோபியும் ஒத்துக் கொள்ள, இம்முறை பெண்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்பதால், கோபியின் சார்பாக ராதிகாவை தேர்தலில் நிறுத்துகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால் பாக்கியா மற்றும் ராதிகாவிற்கு இடையில் மோதல் ஏற்படும் என்றும், கதை இன்னும் சுவாரஸ்யமாக செல்லும் என்றும் தெரிகிறது. இந்த காட்சிகள் அனைத்தும் இனி வரும் எபிசோடுகளில் வர உள்ளது.