இனியாவால் ராதிகா வாழ்க்கையில் விழ போகும் இடி.. மனம் மாறிய கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியா பாக்கியாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி கோபி வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் ராதிகாவிடம் இனியா என் அப்பாவை உங்களிடம் இருந்து பிரிப்பேன் என சவால் விடுகிறார். அதனால் ராதிகா என்ன சொல்வது என தெரியாமல் அதிர்ச்சியில் கோபியிடம் சண்டை போடுகிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவால் கோபி வாழ்க்கையில் பெரிய திருப்பம் வர இருக்கிறது. அந்த வகையில் இனியா பாக்கியாவிடம் கோவித்து கொண்டு கோபி வீட்டிற்கு சென்று விடுகிறார். அங்கே கோபி உடன் மட்டும் பேசிக் கொண்டிருக்க ராதிகாவை மதிப்பதே இல்லை. உடனே ராதிகா இனியாவுடன் அடிக்கடி சண்டை போடுகிறார். அந்த வகையில் இனியாவின் ஸ்கூலில் டூர் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. அதனால் பாக்கியா, இனியாவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கோபி வீட்டிற்கு வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் கோபி இனியாவை ரூமிற்குள் வைத்து பூட்டி விட்டு பாக்கியாவிடம் காட்டமாட்டேன் என சொல்லி அவமானப்படுத்தி அனுப்புகிறார். அதனால் மனம் வருத்தப்பட்ட பாக்கியா அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார். இந்நிலையில் இனியாவிற்கு பாக்கியா கஷ்டப்படுவதை பார்த்து வருத்தமாக இருக்கிறது. அதனால் ராமமூர்த்தியிடம் சொல்லிவிட்டு பாக்கியாவை பார்க்க செல்கிறார். அப்போது ராதிகா போக கூடாது என சொல்ல ஆனால் இனியா நான் போவேன் என கேட்காமல் செல்கிறார். மேலும் என் அப்பாவை உங்களிடம் இருந்து பிரித்து கூட்டிக் கொண்டு செல்வேன் என சவால் விடுகிறாள்.
பேச்சு, மூச்சின்றி மயங்கி விழுந்த அசீம், பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் – பரபரப்பான பிக் பாஸ் வீடு!
Exams Daily Mobile App Download
அப்போது இனியாவை பார்த்து பாக்கியா சந்தோசப்படுகிறார். ஆனால் இனியா தன்னுடைய துணிகளை எடுத்து கொண்டு மீண்டும் கிளம்ப, ஈஸ்வரி, எழில் என அனைவரும் தடுக்கின்றனர். ஆனால் இனியா நான் அங்கே இருந்தால் தான் அப்பாவை இங்கே கூட்டிக் கொண்டு வர முடியும் என்பதால் கண்டிப்பாக நான் அங்கே போவேன் என வீட்டில் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதனால் இனியாவால் தான் பாக்கியலட்சுமி சீரியலில் பெரிய திருப்பம் வர இருப்பது உறுதியாக தெரிகிறது.