குடும்பத்தை எதிர்த்து அமிர்தாவை கரம் பிடிக்கும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா காதலை பற்றி செழியன் ஈஸ்வரியிடம் சொல்ல, அமிர்தாவை தோழியாக மட்டுமே பார்ப்பேன் என கூறச்சொல்லி எழிலிடம் ஈஸ்வரி சத்தியம் வாங்குகிறார். எழில் அமிர்தா காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அவர்களை மீறி எழில் அமிர்தாவை கரம் பிடிக்க இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. கோபி பாக்கியா வாழ்க்கையை மட்டுமே கதையாக கொண்டு செல்லாமல், எழில் அமிர்தா காதல் என இன்னொரு டிராக்கில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், எழில் அமிர்தா காதலுக்கு பாக்கியா சம்மதித்து இருக்கிறார். ஆனால் நடுவே வந்த வர்ஷினியால் எழில் அமிர்தா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை நினைத்து எழில் பயங்கர வருத்தத்துடன் இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
இதற்கிடையே எழில் அமிர்தா காதலை பற்றி செழியன் ஈஸ்வரியிடம் சொல்கிறார். இது கண்டிப்பாக நடக்க கூடாது என ஈஸ்வரி சொல்கிறார். மேலும் பாட்டியின் வற்புறுத்தலால் எழில், அமிர்தாவை தோழியாக மட்டுமே பார்ப்பேன் என ஈஸ்வரி தலையில் கை வைத்து சத்தியம் செய்கிறார். இந்நிலையில் ஈஸ்வரி சொன்னதை கேட்டு எழில் மட்டுமில்லாமல் பாக்கியாவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
ஐந்தாம் வருட திருமண நாள்.. காதல் கணவருடன் கோலாகலமாக கொண்டாடிய VJ மணிமேகலை!
Exams Daily Mobile App Download
அடுத்து வரும் எபிசோடுகளில் எழில் என்ன முடிவு எடுப்பார், அவர் குடும்பத்தை எதிர்த்து அமிர்தாவை திருமணம் செய்வாரா என்பது எல்லாம் கதையின் திருப்பமாக இருக்க போகிறது. ஏற்கனவே இனியா பாக்கியாவை பிரிந்து கோபி தான் முக்கியம் என சொல்லி வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில், எழிலும் அமிர்தாவை கல்யாணம் செய்ய வீட்டை எதிர்த்தால் பாக்கியாவின் நிலைமை என்ன ஆகும் என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது.