இனியாவிற்கு வரும் பிரச்சனை.. நிலைமையை சாதகமாக்கிய கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா குடும்பத்தில் பல பிரச்சனைகளுக்கு பின் தற்போது ஜெனி கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்நிலையில் இனியா மூலம் அடுத்த பிரச்சனை குடும்பத்திற்கு வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாக பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. கோபி வீட்டை விட்டு போக அதனால் குடும்பத்தில் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். மேலும் இனியா ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங்கில், மயூ கோபியை டாடி என கூப்பிட அதனால் இனியா மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஜெனியின் கர்ப்பம் பற்றி குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளதால் மீண்டும் சந்தோசம் வந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை. இனியா மூலமாக மீண்டும் பிரச்சனை ஒன்று வர இருக்கிறது. அதாவது இனியாவின் ஸ்கூலில் தோழி ஒருத்தி மொபைல் போன் கொண்டு வர அதனால் இனியா மாட்டிக் கொள்கிறார். ஸ்கூலில் நாளைக்கு பெற்றோர்களை அழைத்து வந்து டீசி வாங்கி கொள்ள சொல்கின்றனர். அதனால் இனியா கவலையாக இருக்க பாக்கியாவிடம் இது பற்றி சொல்கிறார். உடனே பாக்கியா குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது நீ ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என சத்தம் போடுகிறார்.
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை நகரம் .. அவரச உதவி எண்கள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
Exams Daily Mobile App Download
அதனால் இனியாவிற்கு மிகுந்த கோவம் வருகிறது. அம்மா தனது நல்லதுக்கு தான் சொல்கிறார் என தெரியாமல் பாக்கியா மீது இனியாவிற்கு கோவம் வருகிறது. இந்த நேரத்தில் கோபி இனியாவிற்கு உதவி செய்து அவளை தன் பக்கம் இழுத்து கொள்கிறார். அதனால் சிறு பெண்ணான இனியா இனிமேல் நான் அப்பாவிடம் தான் இருக்க போகிறேன் என சொல்லி மனம் மாறுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடில் வர இருக்கிறது.