வேலையை இழக்கும் ராதிகா.. பிடிக்காமல் பிரியும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா தனக்கு வேலை இருக்கும் திமிரில் பாக்கியாவை பல இடங்களில் அவமானப்படுத்துகிறார். இந்நிலையில் பாக்கியா செய்த காரியத்தால் ராதிகாவின் வேலை பறிபோக இருக்கிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது
பாக்கியலட்சுமி
ராதிகா அலுவலகத்தில் வேலை செய்வதால் பாக்கியாவிற்கு பல கஷ்டங்கள் வருகிறது. இந்நிலையில் பாக்கியா, ராதிகாவின் வேலைக்கு ஆப்பு வைப்பது போல கோடிஸ்வரனிடம் மாட்டி விடுகிறார். அதனால் ராதிகாவின் வேலை எப்போது வேண்டுமானாலும் போக வாய்ப்பு இருக்கிறது. ராதிகா வேலை செய்வதால் தான் கோபி அவரையே திருமணம் செய்து கொள்கிறார்.
இப்போது ராதிகாவுக்கு வேலை போய்விட்டதால், அவர் பாக்கியா போல வீட்டு வேலைகளை செய்கிறார். இதனால் எரிச்சலடையும் கோபி அவரை மதிக்காமல் நடத்துகிறார். இதனால் அடிக்கடி சண்டை வர, ராதிகாவுக்கு பாக்கியா எவ்வளவோ மேல் என கோபிக்கு புரிய வருகிறது. அது மட்டுமில்லாமல் கடந்த எபிசோடில் ராதிகாவுடன் ஈஸ்வரி சண்டை போட்டதால் இன்னும் ராதிகா இந்த வீட்டில் இருப்பாரா என்பதும் எல்லாம் அடுத்து வரும் ட்விஸ்ட்டாக இருக்கும்.