கோபி மீது கோவப்படும் ராதிகா, கல்யாணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபி மீது கோவப்படும் ராதிகா, கல்யாணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி - இன்றைய
கோபி மீது கோவப்படும் ராதிகா, கல்யாணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபி மீது கோவப்படும் ராதிகா, கல்யாணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வந்து பேசியதால் ராதிகாவுக்கு கோவம் வர, கோபி அவருக்கு ஆறுதல் சொல்கிறார். என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என கோபி சொல்கிறார். பின் ராமமூர்த்தி வந்து கோபியை சத்தம் போட, கோபி அவரை அமணப்படுத்துகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா சமைக்க வந்ததை பிடிக்காத கோபி, இதற்கு தான் சிம்பிளாக கல்யாணம் செய்யலாம் என நான் சொன்னேன் என கோபி சொல்கிறார். திருட்டு தனமாக எங்க வீட்டிற்கு வந்தது போல கல்யாணமும் திருட்டு தனமாக நடத்த முடியுமா என ராதிகாவின் அம்மா கேட்கிறார். உடனே ராதிகா டீச்சர் வந்தாங்க அடுத்து எல்லாரும் வந்து பேசுவாங்க என சொல்ல உடனே கோபி அப்படி எல்லாம் நடக்காது என சொல்கிறார். என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என கோபி சொல்ல, எந்த தப்பும் பண்ணாமல் எனக்கு நிம்மதி இல்லை என ராதிகா சொல்கிறார்.

பின் கோபி சமாதானம் செய்து மேடைக்கு அழைத்து வருகிறார். பாக்கியா சமையல் செய்யும் இடத்திற்கு வர, கோபியை நினைத்து பயங்கர கோவத்தில் இருக்கிறார். பின் சாப்பிடுபவர்களுக்கு பரிமாற செல்ல அங்கே ஒருவர் பாக்கியாவிடம் சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்கிறார். நான் கோயம்பத்தூர் சமைக்க வர சொன்னால் வருவீர்களா என கேட்க பாக்கியா வருவேன் என சொல்கிறார். செல்வி, பாக்கியாவை அழைத்து இதெல்லாம் தேவையா என கேட்க, பாக்யா எனக்கு வேலை இருப்பதாக சொல்கிறார். எப்படி இதை எல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருக்கிறாய் என செல்வி கேட்க, எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது.

அதனால் அவரை கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லை என பாக்கியா சொல்லிவிட்டு, கோபி ராதிகாவை பார்க்க கோபி பாக்கியாவை திட்டுகிறார். பின்பாக்கியா உள்ளே சென்று வேலை பார்க்க கோபி உடன் சந்தோசமாக இருந்த நினைவுகள் பாக்கியாவிற்கு வருகிறது. மறுபக்கம் ராமமூர்த்தி மண்டபத்தை கண்டுபிடித்து வர, கோபி ராதிகாவை மாலையும் கழுத்துமாக பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கோபி ராமமூர்த்தியை பார்த்து ஷாக்காக, ராதிகாவும் அவரை பார்த்து என்ன நடக்க போகிறதோ என பதட்டம் அடைகிறார்.

ராமமூர்த்தி கோபியை பார்த்து உனக்கு வெட்கமாக இல்லையா என கேட்க, இல்லை என கோபி சொல்கிறார். ராமமூர்த்தியை பார்த்து செல்வி பாக்கியாவிடம் விவரத்தை சொல்லி வர சொல்கிறார். காலம் போன காலத்தில் கல்யாணம் செய்ய வெட்கமாக இல்லையா என கேட்க, இல்லை 25 வருஷத்திற்கு முன்னால் நீங்க வெட்டிய குழியில் இருந்து தப்பித்து இப்போது தான் நிம்மதியாக இருக்கேன் என கோபி சொல்கிறார். பேரன் பேத்தி எடுக்கும் வயதில் இது தேவையா என ராமமூர்த்தி கேட்க, கோபி அவரை தள்ளிவிடுகிறார். பின் பாக்கியா ஏன் இங்கே வந்தீங்க என கேட்க, கோபி நீ தான் வர சொன்ன என சொல்கிறார். சந்துரு உங்களுடன் தொல்லையாக போச்சு என சொல்ல, இவ தான் வர சொல்லி இருப்பாள் என ராதிகாவின் அம்மா சொல்ல, பாக்கியா அவரிடம் கோவமாக பேசுகிறார்

ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை!

பின் பாக்கியாவை கோபி வெளியே போக சொல்ல, நான் ஏன் போக வேண்டும் என பாக்கியா கேட்கிறார். நான் வேலை பார்க்க வந்திருப்பதாக பாக்கியா சொல்ல, பெரிய வேலை என கோபி சொல்கிறார். பின் சந்துரு போலீஸ் கூப்பிடுவேன் என சொல்ல, கூப்பிடு என ராமமூர்த்தி சொல்கிறார். சொந்த குடும்பத்தை விட்டு பசங்களை விட்டு வந்தால் போலீஸ் நியாயம் கேட்கட்டும் என ராமமூர்த்தி சொல்கிறார். கோர்ட் சொல்லிவிட்டது நான் தனி ஆள் என கோபி சொல்ல, தாத்தா பிள்ளைகளை பற்றி நினைத்து பார் என சொல்ல, என் பிள்ளைகளை நான் மறக்கமாட்டேன் என கோபி சொல்கிறார். காலையில் என் கல்யாணத்தை பார்த்துவிட்டு போங்க என சொல்ல, இந்த கல்யாணத்தை நான் நடத்தவிடமாட்டேன் என ராமமூர்த்தி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!