பிரமாண்டமாக தொடங்கிய ராதிகா கோபி ரிசப்ஷன், மயூராவை பார்த்து ஷாக்கான பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
பிரமாண்டமாக தொடங்கிய ராதிகா கோபி ரிசப்ஷன், மயூராவை பார்த்து ஷாக்கான பாக்கியா - இன்றைய எபிசோட்!
பிரமாண்டமாக தொடங்கிய ராதிகா கோபி ரிசப்ஷன், மயூராவை பார்த்து ஷாக்கான பாக்கியா - இன்றைய எபிசோட்!
பிரமாண்டமாக தொடங்கிய ராதிகா கோபி ரிசப்ஷன், மயூராவை பார்த்து ஷாக்கான பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா மணமக்களாக மேடைக்கு வருகின்றனர். பாக்கியா சமையல் வேலைகளை செய்து முடிக்க, ஆனால் அவர் பொண்ணு மாப்பிள்ளையை பார்க்காமல் இருக்கிறார். பின் மயூராவை பாக்கியா பார்த்துவிட அப்போது அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா சமையல் வேலைகளை முடித்துவிட்டு ரிசப்ஷன் தொடங்கிவிட்டதா என பார்க்க வருகிறார். அப்போது ராதிகாவின் அம்மா வாசலில் நின்று எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்கிறார். மயூராவும் அங்கேயும் இங்கையும் சென்று கொண்டிருக்க, அப்போது பாக்கியா எட்டி பார்க்க ஒருவர் மறைத்துவிடுகிறார். பின் பாக்கியா மீண்டும் சமையல் வேலைகளை தொடங்குகிறார். மறுபக்கம் தாத்தா ஆட்டோவில் ஏறி மண்டபம் பெயர் தெரியாமல் அலைகிறார். பாக்கியா ரிசப்ஷன் வேலைகளை கவனிக்க வந்தவர்களுக்கு காபி ஜூஸ் கொடுக்கிறார்.

ஆனால் அப்போதும் கூட ராதிகா வீட்டு ஆளுங்களை அவர் பார்க்கவில்லை. மயூராவும் அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்க ஆனால் பாக்கியா கண்ணில் அவர் படவில்லை. பின் பாக்கியா வேலையை முடித்துவிட்டு அடுப்பை அணைத்தீர்களா என கேட்க, மற்ற பெண்கள் இல்லை என சொல்கின்றனர். பின் பாக்கியா கிளம்ப மயூரா குறுக்கே ஓடி வருகிறாள். ஆனால் அப்போது கூட பாக்கியா அவரை பார்க்கவில்லை. ராதிகா செமஅழகாக கிளம்பி இருக்க, பாக்கியா நன்றாக எல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். பின் ராதிகாவின் அண்ணி பொண்ணு மாப்பிள்ளைக்கு ஜூஸ் கொடுக்க சொல்கிறார்.

செல்வி சரி நான் கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு, ஜூஸ் கொண்டு செல்கிறார். செல்வி கோபி இருக்கும் ரூம் கதவை திறக்க ஆனால் ஒருவர் வந்து நான் கொடுக்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் தாத்தா மண்டபம் ஒன்றிற்கு போக சொல்ல, பெயர் தெரியாமல் எப்படி போவது என ஆட்டோ ட்ரைவர் கேட்கிறார். கேட்டு கேட்டு போகலாம் என தாத்தா சொல்கிறார். பின் கோபி ராதிகா மணமேடைக்கு வருகின்றனர். இருவரும் மிகவும் அழகாக இருக்கின்றனர். மறுபக்கம் பாக்கியா பந்தி வைக்க ஏற்பாடுகளை செய்கிறார். பின் ரிசப்ஷன் தொடங்க வந்தவர்கள் கோபி ராதிகாவுக்கு பரிசுகளை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

அரசு ஓய்வுதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!

பின் செல்வி பாக்கியா சாப்பாடு பரிமாறுகின்றனர். அப்போது கூட மேடையில் இருக்கும் கோபி ராதிகாவை பார்க்கவில்லை. செல்வி பாக்கியாவிடம் கல்யாண மாப்பிள்ளை பெண்ணை பார்க்கவில்லை என சொல்ல, பாக்கியா எப்படியும் சாப்பிட வருவார்கள் என சொல்கிறார். பின் செல்வி சாப்பாடு பரிமாறும் போது எட்டி பார்க்க ஆனால் மேடையில் அனைவரும் கோபி ராதிகாவை மறைகிறார்கள். பின் மயூரா ராதிகாவின் பாட்டியிடம் எனக்கு தொண்டை வலிப்பதாக சொல்ல, அவர் சுடுதண்ணீர் வாங்கி குடிக்க சொல்கிறார். பின் மயூரா சூடு தண்ணீர் வாங்க போக அங்கே பாக்கியா இருக்கிறார். மயூரா பாக்கியாவை பார்த்து சந்தோசப்பட ஆனால் பாக்கியா அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!