சமையல் வேலைகளை செய்யும் பாக்கியா, மண்டபத்திற்கு வந்த கோபி ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

0
சமையல் வேலைகளை செய்யும் பாக்கியா, மண்டபத்திற்கு வந்த கோபி ராதிகா - இன்றைய
சமையல் வேலைகளை செய்யும் பாக்கியா, மண்டபத்திற்கு வந்த கோபி ராதிகா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட் !
சமையல் வேலைகளை செய்யும் பாக்கியா, மண்டபத்திற்கு வந்த கோபி ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட் !

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா சமையல் வேலையை சரியான முறையில் செய்கிறார். மறுபக்கம் கோபி ராதிகா குடும்பத்துடன் மண்டபத்திற்கு வருகிறார். பின் ராமமூர்த்தி கல்யாணத்தை நிறுத்த ராதிகா வீட்டிற்கு வருகிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி மண்டபத்தின் வெளியே வைத்துள்ள மணமக்கள் பெயரை வாசிக்கிறார். அப்போது கோபிநாத் பெயரை வாசிக்க,இந்த கோபி மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். பின் மணமக்கள் பெயரை வாசிக்க, அதற்குள் மேனேஜர் வந்து அழைக்கிறார். பின் உள்ளே பாக்கியா சமையல் வேலைகளை கவனிக்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என யோசித்துக் கொண்டிருக்க இனியா வந்து சாப்பாடு கேட்கிறார். ஈஸ்வரி எழில் செழியனை வர சொல்ல, வெறும் சாப்பாடு மட்டும் சாப்பிட பிடிக்கவில்லை என இனியாவும் செழியனும் சொல்கின்றனர்.

அப்போது ஈஸ்வரி அவர்களுக்கு முட்டையும், அப்பளமும் செய்து கொடுக்கிறார். எழில் இத்தனை வருஷத்தில் முதன்முறை நீங்க சமைத்து நான் பார்த்து இருக்கிறேன் என சொல்கிறார். செழியன் தாத்தா எங்கே என கேட்க அவர் வெளியே சென்று இருப்பதாக சொல்கிறார். ஏன் தனியாக அனுப்புனீங்க என செழியன் கோவமாக பேசுகிறார். பின் பாக்கியா சமையல் வேலைகளை சரியாக கவனிக்க மேனேஜர் வந்து பொண்ணோட அண்ணனிற்கு உங்க மீது நம்பிக்கை இல்லை. அதனால் சரியாக எல்லாம் செய்ய வேண்டும் என சொல்கிறார்.

பின் கோபி ராதிகா குடும்பத்துடன் மண்டபம் வருகின்றனர். அங்கே கோபி ராதிகா பெயர் பலகையை பார்த்து சந்தோசப்படுகிறார். சந்துருவிடம் அலங்காரம் எல்லாம் நன்றாக இருப்பதாக சொல்ல, சந்துரு மலர் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார். கோபி மலர் யார் என கேட்க, என் மனைவி என சந்துரு சொல்கிறார். பின் சந்துருவின் மனைவி எல்லாரிடமும் நலம் விசாரிக்கிறார். பின் அனைவரும் உள்ளே செல்ல, பாக்கியா அப்பளம் கொடுக்கவில்லை என சொல்லி வெளியே வந்து போன் செய்கிறார். அந்த நேரம் கோபி மண்டபம் உள்ளே வர அப்போது பாக்கியா குரல் கேட்டு கோபி பதட்டம் அடைகிறார். சந்துரு என்ன ஆச்சு என கேட்க, இந்த குரல் எங்கையோ கேட்டது போல இருப்பதாக சொல்கிறார்.

Instagram பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. களமிறங்கியுள்ள சூப்பர் அப்டேட் – இனி எல்லாம் சுலபம் தான்!

மறுபக்கம் ராமமூர்த்தி ராதிகா வீட்டிற்கு வர அங்கே வீடு பூட்டி இருக்கிறது. அவர் எங்கே போயிருப்பாங்க என தெரியாமல் இருக்க பக்கத்து வீட்டு பெண்ணிடம் விசாரிக்கிறார். அவர் நாளை திருமணம் என சொல்ல, ராமமூர்த்தி அதிரச்சி அடைகிறார். பின் ராதிகாவும், கோபியும் ரிசப்ஷன் கிளம்புகின்றனர். அப்போது ராதிகா மிகவும் அழகாக இருப்பதாக அவருடைய அம்மா சொல்கிறார். மயூராவும் ராதிகாவை அழகாக இருப்பதாக சொல்கிறார். பின் பாக்கியா வேலைகளை முடித்துவிட்டு வெளியே வர அப்போது மயூராவும் கிளம்பி வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!