திருமணம் பற்றி கோபியை சந்தித்து பேசும் ராமமூர்த்தி, முடிவில் உறுதியாக இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
திருமணம் பற்றி கோபியை சந்தித்து பேசும் ராமமூர்த்தி, முடிவில் உறுதியாக இருக்கும் கோபி - இன்றைய
திருமணம் பற்றி கோபியை சந்தித்து பேசும் ராமமூர்த்தி, முடிவில் உறுதியாக இருக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
திருமணம் பற்றி கோபியை சந்தித்து பேசும் ராமமூர்த்தி, முடிவில் உறுதியாக இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் கோபி திருமணம் பற்றி புலம்பி கொண்டிருக்க, ராமமூர்த்தி நான் சென்று பேசுகிறேன் என சொல்கிறார். மறுபக்கம் கோபி திருமணத்தை நினைத்து சந்தோசமாக இருக்க ராமமூர்த்தி தனியாக பேச வேண்டும் என கூப்பிட்டு பேசுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தா வெளியே கிளம்பி கொண்டிருக்க, ஈஸ்வரி இன்னைக்கு என்ன நடக்குமோ என தெரியவில்லை என புலம்புகிறார். கோபி ராதிகாவை திருமணம் செய்தால் எல்லாம் முடிந்துவிடுமே என ஈஸ்வரி சொல்ல, புலம்பாமல் அமைதியாக இரு நான் சென்று அவனை திருமணம் செய்ய விட்டு விடுவேனா என கேட்கிறார். எனக்கு இந்த பாக்கியாவை நினைத்து தான் கோவமாக வருகிறது, என்ன நடக்கிறது என தெரியாமல் சமைக்க போகிறேன் என கிளம்பி சென்று இருக்கிறாள் என கேட்க, பாக்கியா பாவம் இந்த குடும்பத்திற்காக எல்லாம் உழைக்கிறாள் என சொல்கிறார்.

தாத்தா எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என கிளம்ப, ஈஸ்வரி நானும் வருகிறேன் என சொல்கிறார். இனியா வீட்டில் தனியாக இருக்கிறாள் அதனால் நீ வர வேண்டாம் என ராமமூர்த்தி சொல்ல, நான் மட்டும் இங்கே தனியாக இருந்து மனதை அடித்து கொள்ள வேண்டும் என சொல்ல, உடனே தாத்தா நான் கண்டிப்பாக இந்த திருமணத்தை நடக்க விடமாட்டேன் உன் மீது சத்தியம் என சொல்கிறார். அப்போது எழில் வர, எங்கே போறீங்க என கேட்கிறார். சொந்தக்காரர் கல்யாணம் போகவில்லை, அதனால் தான் இப்போ போவதாக தாத்தா சொல்கிறார். பின் தாத்தா எழிலிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

தாத்தா நேராக கிளம்பி கோவிலுக்கு சென்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார். மறுபக்கம் கோபி கல்யாணம் ஆக போகுது என சந்தோஷத்தில் இருக்கிறார். அப்போது ராமமூர்த்தி போன் செய்ய கோபி இந்த நேரத்தில் ஏன் இவர் போன் செய்கிறார் என நினைக்கிறார். கோபி போனை எடுக்காமல் இருக்க, ராதிகா யார் என கேட்கிறார். ஆபிசில் ஒரு பிரச்சனை என கோபி சொல்லி சமாளிக்கிறார். பின் கோபி போனை எடுத்து எதற்கு எனக்கு போன் செய்கிறீர்கள் என கேட்க, ராமமூர்த்தி நான் உன்னுடைய அப்பா என சொல்கிறார். ஆனால் கோபி என்னை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்களே அப்போ தெரியவில்லையா என கேட்க, நீ தவறு செய்தாய் அதனால் தான் அப்படி செய்தேன் என தாத்தா சொல்கிறார்

பின் நான் கோவிலில் இருக்கேன் உன்னை பார்த்து பேச வேண்டும் என சொல்ல, ஆனால் கோபி நீங்க என்ன பேச போறீங்க என எனக்கு தெரியும் என சொல்கிறார். அப்போது ராதிகா வந்து உன் முகமே சரி இல்லை எல்லா பிரச்னையும் சரி செய்யுங்கள் என சொல்ல, கோபி ராமமூர்த்தியை பார்க்க கோவிலுக்கு செல்கிறார். அங்கே ராமமூர்த்தி கோபியை பார்த்ததும் ராதிகாவை கல்யாணம் செய்ய போறேன் என உன் அம்மாவிடம் சொல்லி இருக்க இது தப்பு என தோன்றவில்லையா என கேட்க இல்லை என கோபி சொல்கிறார். நீங்க என்ன சொன்னாலும் எனக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடக்க போகிறது என கோபி சொல்கிறார்.

இது ரொம்ப தப்பு என ராமமூர்த்தி சொல்ல, எனக்கு என்னுடைய வாழ்க்கை தான் முக்கியம் என சொல்கிறார். உன் பிள்ளைகளுக்காக நீ நினைத்து பார் என சொல்ல, யார் தடுக்க நினைத்தாலும் இந்த கல்யாணம் நடக்க தான் போகிறது என ராமமூர்த்தி சொல்கிறார். இந்த கல்யாணம் நடப்பது யாருக்கும் நல்லது இல்லை என தாத்தா சொல்ல, என் பிள்ளைகள் முன்னால் என்னை அசிங்கப்படுத்தி அனுப்புனீங்களே அப்போ எங்கே போச்சு எல்லாம் என கேட்கிறார். பின் கோபி நான் எல்லாத்தையும் பொறுத்து கொண்டு வாழ வந்தேன் ஆனால் என் துணிகளை வெளியே தூக்கி போட்டு என்னை அசிங்கப்படுத்தினாள் அப்போது நீங்க அவளுக்கு தான் ஆதரவாக இருந்தீங்க, இப்போ வந்து இப்படி எல்லாம் நடிக்கிறீர்கள் என சொல்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்வு? – அரசின் விளக்கம்!

எனக்கும் பாக்கியாவிற்கும் இடையே எல்லாம் முடிந்துவிட்டது. இனி நான் இவ்வளவு நாள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைய நினைக்கும் இந்த நேரத்தில் நீங்க அதை தடுத்து மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குள் என்னை தள்ள நினைக்கிறீர்களா முடியாது என கோபி சொல்கிறார். நீ மாய உலகத்திற்குள் போக போகிறாய். உன் அம்மா உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள் அவளை நினைத்து பார் என சொல்ல, ஆனால் கோபி என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணாதீங்க என சொல்கிறார். நீ ஒரு நாள் வழி மாறி பாதை இல்லாமல் இருப்பாய் அப்போ தெரியும் நான் சொன்னது சரி என சொல்ல, கோபி எனக்கு வேலை இருக்கிறது என சொல்லி கிளம்புகிறார். பின் கோபி தனியாக இவ்வளவு தூரம் வந்தீங்களா என கேட்க, எனக்கு எப்படி வந்தோனோ அப்படி போக தெரியும் என ராமமூர்த்தி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!